என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மேலூர் அருகே 30 பவுன் நகை கொள்ளை
மேலூர்:
மேலூர் அருகே உள்ள கணபதியாபுரத்தை சேர்ந்தவர் சங்கரபாண்டி. சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பூர்ணிமா (வயது 40), 2 மகன்களுடன் இங்கு வசித்து வருகிறார்.
இவர், நேற்று உறவினர்களுடன் பழனி முருகன் கோவிலுக்கு சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி யாரோ மர்ம மனிதர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
இன்று காலை வீடு திறந்து கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர், பூர்ணிமாவுக்கு தகவல் கொடுத்தனர். மேலூர் போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராம் நாராயணன், சப்- இன்ஸ்பெக்டர் மார்ட்டின் வில்லியம், தனிப்பிரிவு ஏட்டு வீரணன் மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
பழனியில் இருந்து வீடு திரும்பிய பூர்ணிமா, போலீசில் கொடுத்த புகாரில் பீரோவில் இருந்த 30 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் கொள்ளை போயிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்