search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுவை முன்னாள் சபாநாயகர் சிவகுமார் மறைவு: சசிகலா இரங்கல்
    X

    புதுவை முன்னாள் சபாநாயகர் சிவகுமார் மறைவு: சசிகலா இரங்கல்

    புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் மறைவுக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா இரங்கல் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 2016 சட்டமன்றப் பொதுத் தேர்தலின் போது, புதுச்சேரி மாநிலம், நிரவி திருப்பட்டினம் தொகுதியில் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் அன்பு சகோதரர் சிவக்குமார் முன்விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றேன்.

    இந்த படுகொலைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன் இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

    அன்பு சகோதரர் சிவகுமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அண்ணாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

    இவ்வாறு  அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×