என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கும்பகோணத்தில் மாணவர் கொலை வழக்கில் 2 வாலிபர்கள் கைது
சுவாமிமலை:
கும்பகோணத்தை அடுத்த தாராசுரம் கூட்டுறவு நகரை சேர்ந்தவர் நிஜாமைதீன். இவரது மகன் அப்துல் மஜித் (16). கும்பகோணத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்வு அப்துல் மஜித் கும்பகோணம் வளையப்பேட்டை பைபாஸ் சாலையில் உள்ள காவிரி ஆறு பாலத்தின் அடியில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
கொலையாளிகளை பிடிக்க கும்பகோணம் டி.எஸ்.பி. சீனிவாச பெருமாள் மேற்பார்வையில் சுவாமி மலை இன்ஸ்பெக்டர் சுகுணா,கும்பகோணம் தாலுகா இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி உள்பட 5 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர். இந்நிலையில் நேற்றிரவு அப்துல்மஜித் கொலை தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். பிடிபட்ட தாராசுரம் கவுரா தெருவை சேர்ந்த சண்முகசுந்தரம் (வயது 25), அதே பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி (23) ஆகிய 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் சண்முக் சுந்தரத்தின் காதலியை அப்துல்மஜித் கேலி செய்ததாகவும், அதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் நண்பர் ராமமூர்த்தியுடன் சேர்ந்து மாணவரை கொலை செய்தது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்