search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மயிலம் அருகே தாறுமாறாக ஓடிய கார்  மோட்டார் சைக்கிள் மீது மோதி ஒருவர் உயிரிழப்பு
    X

    மயிலம் அருகே தாறுமாறாக ஓடிய கார் மோட்டார் சைக்கிள் மீது மோதி ஒருவர் உயிரிழப்பு

    மயிலம் அருகே தாறுமாறாக ஓடிய கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஒருவர் பலியானார். மயிலம் போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மயிலம்:

    மயிலம் அருகேயுள்ள சின்ன நெற்குணம் பகுதியை சேர்ந்தவர் அப்பாராஜ்(வயது 35). இவர் அதே பகுதியில் பெட்டிகடை நடத்தி வந்தார்.

    இவர் தனது மோட்டார் சைக்கிளில் கூட்டேரிப்பட்டு சென்று தனது கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு நெற்குணம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    நெற்குணம் பஸ்நிறுத்தம் அருகே வந்த போது அதே பகுதியில் வந்த கார் தாறுமாறாக ஓடி அப்பாராஜ் சென்ற மோட்டார் சைக்கிளில் பின்புறம் மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

    தகவல் அறிந்த மயிலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் படுகாயம் அடைந்த அப்பாராஜை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அப்பாராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×