என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: கைதான வாலிபர் சிறையில் அடைப்பு
Byமாலை மலர்23 Dec 2016 11:12 AM GMT (Updated: 23 Dec 2016 11:13 AM GMT)
கடலூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.24 லட்சம் மோசடி செய்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம்:
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வீரப்பன் (35). எம்.ஏ. பட்டதாரி. இவர் சென்னை பாலவாக்கம் அம்பேத்கர் தெருவில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பஸ் நிலையப் பகுதியைச் சேர்ந்த பிரபுமோகன்தாசிடம் அவரது மனைவி மற்றும் தம்பிக்கு, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.31 லட்சம் பெற்றுக் கொண்டார்.
ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும், வேலை வாங்கித் தரவில்லை பணத்தை கேட்டபோது ரூ.7 லட்சம் மட்டும் வீரப்பன் திருப்பி கொடுத்தார். மீதி ரூ.24 லட்சம் பணத்தை திருப்பித் தரவில்லை.
இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன் நாயரிடம் பிரபுமோகன் தாஸ் புகார் செய்தார். விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மோசடி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, வீரப்பனை கைது செய்தனர்.
பின்னர், வீரப்பன் விழுப்புரம் முதலாவது குற்றவியல் நீதிபதி மும்தாஜ் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, விழுப்புரம் கிளை சிறையில் வீரப்பன் அடைக்கப்பட்டார்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வீரப்பன் (35). எம்.ஏ. பட்டதாரி. இவர் சென்னை பாலவாக்கம் அம்பேத்கர் தெருவில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இவர் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பஸ் நிலையப் பகுதியைச் சேர்ந்த பிரபுமோகன்தாசிடம் அவரது மனைவி மற்றும் தம்பிக்கு, அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.31 லட்சம் பெற்றுக் கொண்டார்.
ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும், வேலை வாங்கித் தரவில்லை பணத்தை கேட்டபோது ரூ.7 லட்சம் மட்டும் வீரப்பன் திருப்பி கொடுத்தார். மீதி ரூ.24 லட்சம் பணத்தை திருப்பித் தரவில்லை.
இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன் நாயரிடம் பிரபுமோகன் தாஸ் புகார் செய்தார். விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மோசடி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, வீரப்பனை கைது செய்தனர்.
பின்னர், வீரப்பன் விழுப்புரம் முதலாவது குற்றவியல் நீதிபதி மும்தாஜ் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, விழுப்புரம் கிளை சிறையில் வீரப்பன் அடைக்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X