search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பனி மூட்டத்தால் ரோட்டில் கவிழ்ந்த மினி வேன் - 3 பேர் காயம்
    X

    பனி மூட்டத்தால் ரோட்டில் கவிழ்ந்த மினி வேன் - 3 பேர் காயம்

    சத்தியமங்கலத்தில் பனி மூட்டத்தால் ரோட்டில் மினி வேன் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.
    டி.என்.பாளையம்:

    சத்தியமங்கலத்திலிருந்து நால்ரோடு வழியாக மினி வேன் ஒன்று வாழைக்காய் லோடு ஏற்றிக்கொண்டு அத்தாணி மெயின்ரோட்டில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது தனியார் கல்லூரி அருகே வந்த போது எதிரே வந்த லாரி டிரைவர் பனிமூட்டமாக இருந்ததால் முகப்பு விளக்கை எரிய விட்டபடி வந்துள்ளார். வேனை தாளவாடியை சேர்ந்த டிரைவர் ராஜீ (55) ஓட்டி வந்தார்.

    வண்டியை இடது புறமாக ஓரங்கட்ட அவர் நினைத்த போது நிலைதடுமாறி மினிவேன் கவிழ்ந்தது. மினிவேனில் இருந்த தாளவாடியை சேர்ந்த சித்தராஜ்(49) பங்காரு(45) ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். டிரைவர் ராஜீ எட்டி குதித்து தப்பியுள்ளார்.

    வண்டியிலிருந்த வாழைக்காய்தார்கள் கீழே விழுந்து சேதமானது. அவ்வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். காயமடைந்த 3பேரையும் மீட்டு சத்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×