என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மதுரை மாநகராட்சியில் 19, 20-ந் தேதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
மதுரை:
மதுரை மாநகராட்சியில் கமிஷனர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாநகராட்சி பகுதி மக்களுக்கு வைகை 2-ம் கட்ட குடிநீர்திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பண்ணைப்பட்டி சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து அரசரடி நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ள பிரதான குழாயில் ஆங்காங்கே உடைப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த குழாய்களை மாற்றி அமைக்க வேண்டி உள்ளது.
மேலும் அருள்தாஸ்புரம்- ஆரப்பாளையம் பகுதியில் வைகையாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டுமான பணி நடைபெறுவதால் அந்த வழித்தடத்தில் செல்லும் குடிநீர் குழாயை மாற்றி அமைக்க வேண்டி உள்ளது. எனவே இந்த பணிகளுக்காக மதுரை வடக்கு பகுதியில் வருகிற 19 மற்றும் 20-ந் தேதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
அதன்படி வார்டுகள் 27, 33 முதல் 46 வார்டு பகுதிகளிலும், மற்றும் 89 முதல் 92 வார்டுகளிலும் மேற்கண்ட 2 நாட்கள் குடிநீர் வராது. இந்த பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்