என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வெள்ளக்கோவில் அருகே மொபட்-லாரி மோதல்: மாணவன் பலி
வெள்ளக்கோவில்:
வெள்ளக்கோவில் அருகே தும்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நல்லமுத்து (வயது 50). இவரது மகன் ருத்திரமூர்த்தி (வயது 13). தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை திருமண நிகழ்ச்சிக்காக நல்ல முத்து தனது மகன் ருத்திர மூர்த்தியுடன் மொபட்டில் சென்றார்.
பின்னர் அங்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது கோவையில் இருந்து கரூர் நோக்கி வெள்ளக்கோவில் கடை வீதியில் சென்ற ஒரு லாரி திடீரென மொபட் மீது மோதியது. இதில் தந்தை- மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
படுகாயம் அடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு காங்கயம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் செல்லும் வழியிலேயே ருத்திரமூர்த்தி பரிதாபமாக இறந்தார்.
காயம் அடைந்த நல்லமுத்து காங்கயம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று பின்னர் மேல்-சிகிச்சைக்காக ஈரோடு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வெள்ளக்கோவில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்