என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரார்த்தனை செய்யுங்கள்: அப்பல்லோ நிர்வாகம் வேண்டுகோள்
Byமாலை மலர்5 Dec 2016 6:55 AM GMT (Updated: 5 Dec 2016 6:55 AM GMT)
முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாங்கள் எங்களால் முடிந்த சிகிச்சையை அளித்து வருகிறோம். அவர் உடல்நலம் பெற அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என்று அப்பல்லோ நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னை:
முதல் - அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இதயம் செயல் இழப்பு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானதும் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் உடனடியாக மாநிலம் முழுவதும் அ.தி.மு.க. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, பிரார்த்தனை செய்யும்படி அறிவுறுத்தினார்கள். இதையடுத்து நேற்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை ராகு கால பூஜைகள் நடத்தப்பட்டது.
கடந்த 72 நாட்களாக தினமும் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வரும் அ.தி. மு.க. பிரமுகர்கள் நேற்றிரவு ஆங்காங்கே கண்ணீர் மல்க மிக தீவிரமான பிரார்த்தனையை செய்தனர். இன்று காலையிலும் அ.தி.மு.க.வினர் சிறப்பு பூஜைகள் நடத்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே அப்பல்லோ நிர்வாகம் “பொதுமக்கள் முதல்-அமைச்சருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளது. அப்பல்லோ மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குனர் சங்கீதா ரெட்டி இதுகுறித்த தகவலை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், “முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாங்கள் எங்களால் முடிந்த சிகிச்சையை அளித்து வருகிறோம். அவர் உடல்நலம் பெற அனைவரும் பிரார்த்திக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
முதல் - அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இதயம் செயல் இழப்பு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானதும் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் உடனடியாக மாநிலம் முழுவதும் அ.தி.மு.க. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, பிரார்த்தனை செய்யும்படி அறிவுறுத்தினார்கள். இதையடுத்து நேற்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை ராகு கால பூஜைகள் நடத்தப்பட்டது.
கடந்த 72 நாட்களாக தினமும் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வரும் அ.தி. மு.க. பிரமுகர்கள் நேற்றிரவு ஆங்காங்கே கண்ணீர் மல்க மிக தீவிரமான பிரார்த்தனையை செய்தனர். இன்று காலையிலும் அ.தி.மு.க.வினர் சிறப்பு பூஜைகள் நடத்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே அப்பல்லோ நிர்வாகம் “பொதுமக்கள் முதல்-அமைச்சருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளது. அப்பல்லோ மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குனர் சங்கீதா ரெட்டி இதுகுறித்த தகவலை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், “முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நாங்கள் எங்களால் முடிந்த சிகிச்சையை அளித்து வருகிறோம். அவர் உடல்நலம் பெற அனைவரும் பிரார்த்திக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X