என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடல்நிலை சவால்களை சந்தித்து ஜெயலலிதா மீண்டு வருவார்: தமிழிசை நம்பிக்கை
Byமாலை மலர்5 Dec 2016 4:53 AM GMT (Updated: 5 Dec 2016 4:53 AM GMT)
முதல்-அமைச்சர் ஜெயலலிதா பல இக்கட்டான கட்டங்களை கடந்து வந்துள்ளார். இப்போதும் உடல் நிலையில் ஏற்பட்டுள்ள சவால்களை சந்தித்து மீண்டு வருவார் என தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அரசியல் பயணமாக 5 பேர் குழுவுடன் நேற்று ஜெர்மனி புறப்பட்டார்.
இரவு டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்தபோது முதல்- அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை பற்றிய தகவலை அறிந்தார். உடனடியாக தனது பயணத்தை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பினார். அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் திடீரென்று பின்னடைவு ஏற்பட்டதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தேன். இந்த நேரத்தில் உணர்வுபூர்வமாக வெளிநாடு செல்ல விரும்பாததால் பயணத்தை ரத்து செய்தேன். முதல்வர் குணமடைய பிரார்த்திக்கிறேன். டெல்லி தலைவர்களும் பிரார்த்திக்கிறார்கள்.
இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்ய ஆஞ்ஜியோ செய்துள்ளார்கள். மிகவும் பின்னடைவான கால கட்டங்களில் அவசர கால சிகிச்சைகள் பலன் அளித்துள்ளதை மருத்துவ துறையில் பார்த்து இருக்கிறேன்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா பல இக்கட்டான கட்டங்களை கடந்து வந்துள்ளார். இப்போதும் உடல் நிலையில் ஏற்பட்டுள்ள சவால்களை சந்தித்து மீண்டு வருவார்.
நம்பிக்கையோடு அவசர கால சிகிச்சைகளை எதிர் கொண்ட பலர் மீண்டு இருக்கிறார்கள். அதே போல் விரைவில் அவர் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
இந்த நேரத்தில் அ.தி.மு.க. தொண்டர்களும் தன்னம்பிக்கையோடு தங்கள் பிரார்த்தனையை தொடர வேண்டும். எந்த விதத்திலும் தொண்டர்கள் உணர்ச்சி வசப்படக் கூடாது என்பதே எனது வேண்டுகோள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அரசியல் பயணமாக 5 பேர் குழுவுடன் நேற்று ஜெர்மனி புறப்பட்டார்.
இரவு டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்தபோது முதல்- அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை பற்றிய தகவலை அறிந்தார். உடனடியாக தனது பயணத்தை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பினார். அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் திடீரென்று பின்னடைவு ஏற்பட்டதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தேன். இந்த நேரத்தில் உணர்வுபூர்வமாக வெளிநாடு செல்ல விரும்பாததால் பயணத்தை ரத்து செய்தேன். முதல்வர் குணமடைய பிரார்த்திக்கிறேன். டெல்லி தலைவர்களும் பிரார்த்திக்கிறார்கள்.
இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்ய ஆஞ்ஜியோ செய்துள்ளார்கள். மிகவும் பின்னடைவான கால கட்டங்களில் அவசர கால சிகிச்சைகள் பலன் அளித்துள்ளதை மருத்துவ துறையில் பார்த்து இருக்கிறேன்.
முதல்-அமைச்சர் ஜெயலலிதா பல இக்கட்டான கட்டங்களை கடந்து வந்துள்ளார். இப்போதும் உடல் நிலையில் ஏற்பட்டுள்ள சவால்களை சந்தித்து மீண்டு வருவார்.
நம்பிக்கையோடு அவசர கால சிகிச்சைகளை எதிர் கொண்ட பலர் மீண்டு இருக்கிறார்கள். அதே போல் விரைவில் அவர் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
இந்த நேரத்தில் அ.தி.மு.க. தொண்டர்களும் தன்னம்பிக்கையோடு தங்கள் பிரார்த்தனையை தொடர வேண்டும். எந்த விதத்திலும் தொண்டர்கள் உணர்ச்சி வசப்படக் கூடாது என்பதே எனது வேண்டுகோள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X