search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா உடல்நிலை - கடந்து வந்த நாட்கள்...
    X

    ஜெயலலிதா உடல்நிலை - கடந்து வந்த நாட்கள்...

    உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது முதல் ஏற்பட்ட முன்னேற்றம் தொடர்பாக இங்கு காணலாம்.
    சென்னை:

    செப்டம்பர் 22-ந் தேதி:- காய்ச்சல் மற்றும் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அனுமதி.

    செப். 23-ந் தேதி:- ஜெயலலிதா உடல் நிலை சீராக இருப்பதாக அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிக்கை.

    செப். 24-ந் தேதி:- சாதாரண உணவுகளை ஜெயலலிதா உட்கொள்வதாக தகவல்.

    செப். 25-ந் தேதி:- ஜெயலலிதா மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வார் என்பது போன்ற தவறான செய்திகளை யாரும் வெளியிட வேண்டாம் என அப்பல்லோ நிர்வாகம் கேட்டுக்கொண்டது.

    செப். 29-ந் தேதி:- ஜெயலலிதாவின் உடல் நிலை சீராக உள்ளது, அவர் சிகிச்சைகளுக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தகவல்.

    அக்டோபர் 2-ந் தேதி:- லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆலோசனை.

    அக். 3-ந் தேதி:- ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்று நோயை சரிசெய்ய, ஆன்டிபயாடிக் மருந்துகள் செலுத்தப்பட்டதுடன், சுவாசக் கருவியும் பொருத்தப்பட்டது.

    அக். 4-ந் தேதி:- ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சிகிச்சை தொடர்வதாகவும் தகவல்.

    அக். 6-ந் தேதி:- டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் சென்னை வந்து லண்டன் டாக்டர், அப்பல்லோ டாக்டர்களுடன் இணைந்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து ஆலோசனை.

    அக். 8-ந் தேதி:- நுரையீரலில் இருக்கும் நீரை நீக்க சிகிச்சை.

    அக். 10-ந் தேதி:- சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்கள் வந்து உடற்பயிற்சி அளிக்க தொடங்கினர். அதே நாளில், டெல்லி எய்ம்ஸ் டாக்டர்களும் மீண்டும் அப்பல்லோ ஆஸ்பத்திரி வந்தனர்.

    அக். 21-ந் தேதி:- தீவிர சிகிச்சைப் பிரிவு டாக்டர்களின் தலைமையில் இதயநோய், நுரையீரல் நோய், தொற்று நோய் சிகிச்சை உள்ளிட்ட டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளிப்பதாக அப்பல்லோ நிர்வாகம் அறிக்கை.

    நவம்பர் 19-ந் தேதி:- தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டில் உள்ள தனி அறைக்கு ஜெயலலிதா மாற்றம். தொடர்ந்து அவருக்கு பிசியோதெரபி சிகிச்சை வழங்கப்பட்டது.

    டிசம்பர் 3-ந் தேதி:- டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் மீண்டும் சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆராய்ந்தனர்.

    டிச. 4-ந் தேதி:- ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை.

    Next Story
    ×