search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதாவுக்கு சரத்குமார் வாழ்த்து
    X

    ஜெயலலிதாவுக்கு சரத்குமார் வாழ்த்து

    தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா புத்துணர்ச்சியுடன் புது வேகத்துடன் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    “மக்கள் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்துள்ளேன், வெகு விரைவில் வழக்கமான பணிகளில் ஈடுபட காத்திருக்கிறேன்” என்று முதலமைச்சர் கூறியிருப்பது நமக்கெல்லாம் மட்டற்ற மகிழ்ச்சி தரும் செய்தியாகும்.

    கோடானு கோடி மக்களின் பிரார்த்தனைகள், முதலமைச்சரின் மன உறுதி, தன்னலம் கருதாமல் அவர் மக்கள் பணியில் செய்த தியாக செயல்கள் இவை அனைத்தும், அவரை மீண்டும் நீண்ட நெடிய காலம் பொதுசேவை செய்ய உறுதுணையாக இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.

    கூடிய விரைவில், புத்துணர்ச்சியுடன் புது வேகத்துடன் தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க பணிகளை மேற்கொண்டு நாடு நலம்பெற முதலமைச்சர் புரட்சி தலைவி அவர்கள் உழைக்க ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×