என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பணப்பட்டு வாடா விசாரணையை முடிக்காமல் தேர்தல் நடத்துவது ஏன்?: ராமதாஸ்
Byமாலை மலர்8 Nov 2016 7:08 AM GMT (Updated: 8 Nov 2016 7:08 AM GMT)
பணப்பட்டு வாடா விசாரணையை முடிக்காமல் தேர்தல் நடத்துவது ஏன்? என்று தலைமை தேர்தல் கமிஷனுக்கு ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை:
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்காக தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட இரு தொகுதிகள் என்ற அவப்பெயரை தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகள் பெற்றுள்ளன. இந்த இரு தொகுதிகளிலும் ஓட்டுக்கு பணம் தரப்பட்டது உள்ளங்கை நெல்லிக்கனி ஆகும்.
இதை தேர்தல் ஆணையமே ஒப்புக்கொண்டிருக்கிறது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது குறித்த புகார்களின் அடிப்படையில் இந்த இரு தொகுதிகளின் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அங்கு நியாயமான, சுதந்திரமான தேர்தல் நடத்துவதற்குரிய சூழல் ஏற்படாத நிலையில், அங்கு அவசர அவசரமாக தேர்தல் நடத்தப்படுவது ஏன்? என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வினா எழுப்பி வருகிறது.
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? என்றும் பா.ம.க. வினவி வருகிறது. இந்த வினாக்களுக்கெல்லாம் இதுவரை பதில் அளிக்காத தேர்தல் ஆணையம், இப்போது தான் முதல் முறையாக தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட விருப்பதாகவும், இதுகுறித்து அ.தி.மு.கவுக்கும், தி.மு.கவுக்கும் அறிவிக்கை அனுப்பப் பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டது குறித்து விளக்கம் கேட்டு அ.தி.மு.கவுக்கும், தி.மு.கவுக்கும் கடந்த மே மாதம் 19-ஆம் தேதியே அறிவிக்கை அனுப்பிய தேர்தல் ஆணையம், அது குறித்த தகவலை கடந்த 6 மாதங்களாக வெளியிடாமல் மறைத்து வந்திருக்கிறது. வழக்கமாக இத்தகைய அறிவிக்கை அனுப்பப்பட்டிருந்தால் அதற்கு ஒரு வாரத்தில் பதில் பெற்று அதனடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்வது வழக்கமாகும். ஆனால், தி.மு.கவுக்கும், அ.தி.மு.கவுக்கும் தேர்தல் ஆணையம் அறிவிக்கை அனுப்பி 6 மாதங்கள் நிறைவடைவுள்ள நிலையில், அதற்கு இரு கட்சிகளும் பதில் அளித்தனவா? என்பதைக் கூட தேர்தல் ஆணையம் தெரிவிக்கவில்லை.
ஒருவேளை இரு கட்சிகளும் விளக்கம் அளித்திருந்தால், அதை ஆணையம் ஆய்வு செய்து அதனடிப்படையில் விசாரணையைத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், இன்று வரை தேர்தல் ஆணையத்தின் விசாரணை தொடங்கியதாக தெரிய வில்லை.
இந்த உண்மைகளை வைத்துப் பார்க்கும் போது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து அடுக்கடுக்காக வினாக்கள் எழுகின்றன. அவை....
1. ஓட்டுக்கு பணம் தரப்பட்டது குறித்து தி.மு.க வுக்கும், அ.தி.மு.கவுக்கும் அனுப்பப்பட்ட அறிவிக்கைகள் மீது கடந்த 6 மாதங்களாக பதில் பெறாதது ஏன்?
2. ஒருவேளை இரு கட்சிகளும் பதில் அளித்திருந்தால் அதனடிப்படையில் விசாரணையை தொடங்காதது ஏன்?
3. இரு தொகுதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டும் தேர்தல் ஆணையம், அதற்கு முன்பே தொடங்கப்பட்ட விசாரணை நடைமுறையை முடிப்பதில் ஆர்வம் காட்டாதது ஏன்?
4. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது குறித்த விசாரணையின் முடிவு வருவதற்கு முன்பே, தேர்தல் நடத்தப்பட்டால், விசாரணையின் நோக்கம் நிறைவேறுமா?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தேர்தல் ஆணையம் தான் விடையளிக்க வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையத்திடமிருந்து இந்த கேள்விகளுக்கு நியாயமான பதில் கிடைக்கப்போவதில்லை.
தேர்தல் முறைகேடுகள் குறித்து இரு முக்கிய அரசியல் கட்சிகளுக்கு அறிவிக்கை அனுப்பியதை தேர்தல் ஆணையம் மறைத்ததில் இருந்தே அதன் நம்பகத்தன்மை கேள்விக் குறியாகிவிட்டது. அதேபோல், தேர்தல் ஆணையம் அறிவிக்கை அனுப்பியது குறித்தோ, அது தங்களுக்கு வந்து சேர்ந்தது குறித்தோ அதிமுக, திமுக ஆகிய கட்சிகளும் தெரிவிக்கவில்லை.
இதிலிருந்தே இந்த இரு கட்சிகளும், தேர்தல் ஆணையமும் கூட்டணி அமைத்து செயல்படுவது உறுதியாகிறது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் நடந்த முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நினைத்திருந்தால் 2 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது போன்ற கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க முடியும். ஆனால், சாதாரண நடவடிக்கையைக் கூட ஆணையம் எடுக்கவில்லை.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலில் ஆணையம் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெற வேண்டுமானால், வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டது தொடர்பாக தொடங்கப்பட்ட விசாரணை நடைமுறையில் இதுவரை ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து விரிவான அறிக்கை வெளியிட வேண்டும். இந்த விசாரணை முடியும் வரை தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை ஒத்திவைக்க வேண்டும். இரு கட்சிகளும் ஓட்டுக்கு பணம் கொடுத்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், அதனடிப்படையில் இரு கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதுடன், அவற்றின் சின்னங்களையும் தேர்தல் ஆணையம் முடக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததற்காக தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட இரு தொகுதிகள் என்ற அவப்பெயரை தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகள் பெற்றுள்ளன. இந்த இரு தொகுதிகளிலும் ஓட்டுக்கு பணம் தரப்பட்டது உள்ளங்கை நெல்லிக்கனி ஆகும்.
இதை தேர்தல் ஆணையமே ஒப்புக்கொண்டிருக்கிறது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது குறித்த புகார்களின் அடிப்படையில் இந்த இரு தொகுதிகளின் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், அங்கு நியாயமான, சுதந்திரமான தேர்தல் நடத்துவதற்குரிய சூழல் ஏற்படாத நிலையில், அங்கு அவசர அவசரமாக தேர்தல் நடத்தப்படுவது ஏன்? என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வினா எழுப்பி வருகிறது.
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது? என்றும் பா.ம.க. வினவி வருகிறது. இந்த வினாக்களுக்கெல்லாம் இதுவரை பதில் அளிக்காத தேர்தல் ஆணையம், இப்போது தான் முதல் முறையாக தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட விருப்பதாகவும், இதுகுறித்து அ.தி.மு.கவுக்கும், தி.மு.கவுக்கும் அறிவிக்கை அனுப்பப் பட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது.
வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டது குறித்து விளக்கம் கேட்டு அ.தி.மு.கவுக்கும், தி.மு.கவுக்கும் கடந்த மே மாதம் 19-ஆம் தேதியே அறிவிக்கை அனுப்பிய தேர்தல் ஆணையம், அது குறித்த தகவலை கடந்த 6 மாதங்களாக வெளியிடாமல் மறைத்து வந்திருக்கிறது. வழக்கமாக இத்தகைய அறிவிக்கை அனுப்பப்பட்டிருந்தால் அதற்கு ஒரு வாரத்தில் பதில் பெற்று அதனடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்வது வழக்கமாகும். ஆனால், தி.மு.கவுக்கும், அ.தி.மு.கவுக்கும் தேர்தல் ஆணையம் அறிவிக்கை அனுப்பி 6 மாதங்கள் நிறைவடைவுள்ள நிலையில், அதற்கு இரு கட்சிகளும் பதில் அளித்தனவா? என்பதைக் கூட தேர்தல் ஆணையம் தெரிவிக்கவில்லை.
ஒருவேளை இரு கட்சிகளும் விளக்கம் அளித்திருந்தால், அதை ஆணையம் ஆய்வு செய்து அதனடிப்படையில் விசாரணையைத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், இன்று வரை தேர்தல் ஆணையத்தின் விசாரணை தொடங்கியதாக தெரிய வில்லை.
இந்த உண்மைகளை வைத்துப் பார்க்கும் போது தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து அடுக்கடுக்காக வினாக்கள் எழுகின்றன. அவை....
1. ஓட்டுக்கு பணம் தரப்பட்டது குறித்து தி.மு.க வுக்கும், அ.தி.மு.கவுக்கும் அனுப்பப்பட்ட அறிவிக்கைகள் மீது கடந்த 6 மாதங்களாக பதில் பெறாதது ஏன்?
2. ஒருவேளை இரு கட்சிகளும் பதில் அளித்திருந்தால் அதனடிப்படையில் விசாரணையை தொடங்காதது ஏன்?
3. இரு தொகுதி தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டும் தேர்தல் ஆணையம், அதற்கு முன்பே தொடங்கப்பட்ட விசாரணை நடைமுறையை முடிப்பதில் ஆர்வம் காட்டாதது ஏன்?
4. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது குறித்த விசாரணையின் முடிவு வருவதற்கு முன்பே, தேர்தல் நடத்தப்பட்டால், விசாரணையின் நோக்கம் நிறைவேறுமா?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தேர்தல் ஆணையம் தான் விடையளிக்க வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையத்திடமிருந்து இந்த கேள்விகளுக்கு நியாயமான பதில் கிடைக்கப்போவதில்லை.
தேர்தல் முறைகேடுகள் குறித்து இரு முக்கிய அரசியல் கட்சிகளுக்கு அறிவிக்கை அனுப்பியதை தேர்தல் ஆணையம் மறைத்ததில் இருந்தே அதன் நம்பகத்தன்மை கேள்விக் குறியாகிவிட்டது. அதேபோல், தேர்தல் ஆணையம் அறிவிக்கை அனுப்பியது குறித்தோ, அது தங்களுக்கு வந்து சேர்ந்தது குறித்தோ அதிமுக, திமுக ஆகிய கட்சிகளும் தெரிவிக்கவில்லை.
இதிலிருந்தே இந்த இரு கட்சிகளும், தேர்தல் ஆணையமும் கூட்டணி அமைத்து செயல்படுவது உறுதியாகிறது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் நடந்த முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நினைத்திருந்தால் 2 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது போன்ற கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க முடியும். ஆனால், சாதாரண நடவடிக்கையைக் கூட ஆணையம் எடுக்கவில்லை.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலில் ஆணையம் இழந்த நம்பிக்கையை மீண்டும் பெற வேண்டுமானால், வாக்காளர்களுக்கு பணம் தரப்பட்டது தொடர்பாக தொடங்கப்பட்ட விசாரணை நடைமுறையில் இதுவரை ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து விரிவான அறிக்கை வெளியிட வேண்டும். இந்த விசாரணை முடியும் வரை தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தலை ஒத்திவைக்க வேண்டும். இரு கட்சிகளும் ஓட்டுக்கு பணம் கொடுத்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டால், அதனடிப்படையில் இரு கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வதுடன், அவற்றின் சின்னங்களையும் தேர்தல் ஆணையம் முடக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X