search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை மாநகராட்சியில் 5-ந் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம்
    X

    தஞ்சை மாநகராட்சியில் 5-ந் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தம்

    தஞ்சை மாநகராட்சியில் 5-ந் தேதி குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி குடிநீர் வழங்கல் பணியில், வெண்ணாறு தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து பழைய திருவையாறு சாலை வழியாக வரும் பிரதான குடிநீர் குழாயில் பூக்குளம் அருகில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரி செய்யும் பணி 4-ந் தேதி நடைபெற உள்ளது.

    எனவே 5-ந் தேதி (சனிக்கிழமை) தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் இருக்காது. எனவே பொதுமக்கள் தேவையான குடிநீரை சேமித்து வைத்து கொள்ளவும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவும் மாநகராட்சி ஆணையாளர் வரதராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

    Next Story
    ×