என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேலடுக்கு சுழற்சி நீடிப்பு: தென்மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்
Byமாலை மலர்1 Nov 2016 5:23 AM GMT (Updated: 1 Nov 2016 8:40 AM GMT)
மேல் அடுக்கு சுழற்சியால் தென்மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 30-ந் தேதி தாமதமாக தொடங்கியது. தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்துவருகிறது.
இந்த நிலையில் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தையொட்டி காற்று மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது.
காற்று மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் அடுத்த 2 நாட்களுக்கு தென்மாவட்டங்களில் அநேக இடங்களில் மழைபெய்யும், ஒருசில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் மற்ற இடங்களிலும் உள்மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஏதாவது ஒரு பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 8 செ.மீ மழை பதிவாகி உள்ளது. தூத்துக்குடி 5 செ.மீ, கமுதி 4, சிவகிரி-3, திருவரை, மருதூர் தலா -2, காட்டுமன்னார் கோவில் 1 செ.மீ மழைபெய்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 30-ந் தேதி தாமதமாக தொடங்கியது. தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்துவருகிறது.
இந்த நிலையில் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தையொட்டி காற்று மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது.
காற்று மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் அடுத்த 2 நாட்களுக்கு தென்மாவட்டங்களில் அநேக இடங்களில் மழைபெய்யும், ஒருசில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் மற்ற இடங்களிலும் உள்மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஏதாவது ஒரு பகுதியில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாபநாசத்தில் 8 செ.மீ மழை பதிவாகி உள்ளது. தூத்துக்குடி 5 செ.மீ, கமுதி 4, சிவகிரி-3, திருவரை, மருதூர் தலா -2, காட்டுமன்னார் கோவில் 1 செ.மீ மழைபெய்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X