என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தக்கலை அருகே அனாதையாக நின்ற 28 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு
Byமாலை மலர்28 Oct 2016 2:28 PM GMT (Updated: 28 Oct 2016 2:28 PM GMT)
தக்கலை அருகே மருந்து கோட்டை பாலம் அருகில் ஒரு மாத காலமாக அனாதையாக நின்ற 28 மோட்டார் சைக்கிள்களை போலீசார் மீட்டு தக்கலை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
தக்கலை:
தக்கலை அருகே மருந்து கோட்டை பாலம் அருகில் கடந்த ஒரு மாத காலமாக 28 மோட்டார் சைக்கிள்கள் அனாதையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது 47) என்பவர் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கனகராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிறிஸ்டோபர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
பின்னர் மோட்டார் சைக்கிள் குறித்து அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தனர். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிள்கள் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் இந்த பகுதியை சேர்ந்த மோட்டார் சைக்கிள் இல்லை எனவும் கூறினார்கள்.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் அங்கு அனாதையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 28 மோட்டார் சைக்கிள்களையும் மீட்டு தக்கலை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மோட்டார் சைக்கிள்களில் உள்ள பதிவு எண்களை கொண்டு அவை யாருடையது என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தக்கலை அருகே மருந்து கோட்டை பாலம் அருகில் கடந்த ஒரு மாத காலமாக 28 மோட்டார் சைக்கிள்கள் அனாதையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது 47) என்பவர் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கனகராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கிறிஸ்டோபர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
பின்னர் மோட்டார் சைக்கிள் குறித்து அருகில் உள்ளவர்களிடம் விசாரித்தனர். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிள்கள் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் இந்த பகுதியை சேர்ந்த மோட்டார் சைக்கிள் இல்லை எனவும் கூறினார்கள்.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் அங்கு அனாதையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 28 மோட்டார் சைக்கிள்களையும் மீட்டு தக்கலை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். மோட்டார் சைக்கிள்களில் உள்ள பதிவு எண்களை கொண்டு அவை யாருடையது என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X