என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராயபுரத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: வாலிபர் கைது
Byமாலை மலர்28 Oct 2016 7:06 AM GMT (Updated: 28 Oct 2016 7:07 AM GMT)
ராயபுரத்தில் பெண்ணுக்கு அரிவாள் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ராயபுரம்:
ராயபுரம் ரெயில் நிலையத்தில் கட்டுமான பணி நடந்து வருகிறது. இங்கு ராசிபுரத்தை சேர்ந்த கலா (35) தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று மாலை பணி முடிந்து அதே பகுதியில் தொழிலாளர்கள் இருந்தனர். அப்போது உடன் வேலை பார்க்கும் தொழிலாளி ரத்னவேல் திடீரென அரிவாளால் கலாவை சரமாரியாக வெட்டினர்.
இதில் அவரது தலை, கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அலறல் சத்தம் கேட்டு வந்த தொழிலாளர்கள் கலாவை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ராயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரத்னவேலை கைது செய்தனர்.
அரிவாள் வெட்டில் காயம் அடைந்த கலா கணவரை பிரிந்து வாழ்கிறார். எனவே கள்ளக்காதல் தகராறில் கொலை முயற்சி நடந்ததா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X