என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாடாளுமன்ற கூட்டம் நடக்கும் நாளில் தமிழகத்தில் தொடர் போராட்டம்: பி.ஆர். பாண்டியன் பேட்டி
Byமாலை மலர்28 Oct 2016 4:22 AM GMT (Updated: 28 Oct 2016 4:22 AM GMT)
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நாடாளுமன்ற கூட்டம் நடக்கும் நாளில் தமிழகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மன்னார்குடி:
தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம், நீர் பங்கீட்டு ஒழுங்காற்று குழுவை அமைக்காமல் மத்திய அரசு, கர்நாடகத்துக்கு ஆதரவாக அரசியல் லாப நோக்கோடு தமிழகத்துக்கு துரோகம் இழைத்துள்ளது.
இதை கண்டிப்பதோடு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். முல்லைப் பெரியாறு, பாலாறு, சிறுவாணி அணை உரிமைகளை மீட்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேளாண் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவும் வலியுறுத்தியும், மத்திய அரசின் தமிழக விரோத நடவடிக்கையை தமிழக மக்களிடம் எடுத்துரைக்கும் விதமாக வருகிற நவம்பர் 16-ந் தேதி முதல் டிசம்பர் 16-ந் தேதி வரை நடைபெற உள்ள பாராளுமன்ற கூட்டத் தொடர் முழுவதும் தமிழகத்தை போராட்ட தினங்களாக அறிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.
இதற்காக பிரசார பயணம் நவம்பர் 5-ந் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் தொடங்கி நவம்பர் 11-ந் தேதி சென்னை கவர்னர் மாளிகையில் கவர்னரிடம் மனு கொடுத்து நிறைவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் மன்னார்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
காவிரி மேலாண்மை வாரியம், நீர் பங்கீட்டு ஒழுங்காற்று குழுவை அமைக்காமல் மத்திய அரசு, கர்நாடகத்துக்கு ஆதரவாக அரசியல் லாப நோக்கோடு தமிழகத்துக்கு துரோகம் இழைத்துள்ளது.
இதை கண்டிப்பதோடு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும். முல்லைப் பெரியாறு, பாலாறு, சிறுவாணி அணை உரிமைகளை மீட்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வேளாண் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கவும் வலியுறுத்தியும், மத்திய அரசின் தமிழக விரோத நடவடிக்கையை தமிழக மக்களிடம் எடுத்துரைக்கும் விதமாக வருகிற நவம்பர் 16-ந் தேதி முதல் டிசம்பர் 16-ந் தேதி வரை நடைபெற உள்ள பாராளுமன்ற கூட்டத் தொடர் முழுவதும் தமிழகத்தை போராட்ட தினங்களாக அறிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.
இதற்காக பிரசார பயணம் நவம்பர் 5-ந் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் தொடங்கி நவம்பர் 11-ந் தேதி சென்னை கவர்னர் மாளிகையில் கவர்னரிடம் மனு கொடுத்து நிறைவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X