என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தீபாவளி பண்டிகையையொட்டி எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
Byமாலை மலர்27 Oct 2016 7:07 PM GMT (Updated: 27 Oct 2016 7:07 PM GMT)
தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை எழும்பூர்-நெல்லை இடையே பகல் நேர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை எழும்பூர்-நெல்லை இடையே பகல் நேர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு கட்டண ரெயில் (வ.எண்.06037) இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு புறப்பட்டு மாலை 6.45 மணிக்கு நெல்லை சென்றடையும். நெல்லையில் இருந்து வருகிற 31-ந்தேதி சிறப்பு கட்டண ரெயில் (வ.எண்.06038) அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு மாலை 6.20 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
இதேபோல சிறப்பு கட்டண ரெயில் (வ.எண்.06001) நவம்பர் 11-ந்தேதி இரவு 9.05 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு நெல்லை சென்றடையும். நெல்லையில் இருந்து சுவிதா சிறப்பு ரெயில் (வ.எண்.82602) நவம்பர் 13-ந்தேதி பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
சென்னை சென்டிரலில் இருந்து சுவிதா சிறப்பு கட்டண ரெயில் (வ.எண்.82621) நவம்பர் 11-ந்தேதி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
மறுமார்க்கமாக எர்ணாகுளத்தில்இருந்து சுவிதா சிறப்பு கட்டண ரெயில் (வ.எண்.82622) நவம்பர் 13-ந்தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை எழும்பூர்-நெல்லை இடையே பகல் நேர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு கட்டண ரெயில் (வ.எண்.06037) இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு புறப்பட்டு மாலை 6.45 மணிக்கு நெல்லை சென்றடையும். நெல்லையில் இருந்து வருகிற 31-ந்தேதி சிறப்பு கட்டண ரெயில் (வ.எண்.06038) அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு மாலை 6.20 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
இதேபோல சிறப்பு கட்டண ரெயில் (வ.எண்.06001) நவம்பர் 11-ந்தேதி இரவு 9.05 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு நெல்லை சென்றடையும். நெல்லையில் இருந்து சுவிதா சிறப்பு ரெயில் (வ.எண்.82602) நவம்பர் 13-ந்தேதி பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
சென்னை சென்டிரலில் இருந்து சுவிதா சிறப்பு கட்டண ரெயில் (வ.எண்.82621) நவம்பர் 11-ந்தேதி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
மறுமார்க்கமாக எர்ணாகுளத்தில்இருந்து சுவிதா சிறப்பு கட்டண ரெயில் (வ.எண்.82622) நவம்பர் 13-ந்தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X