search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீபாவளி பண்டிகையையொட்டி எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
    X

    தீபாவளி பண்டிகையையொட்டி எழும்பூர்-நெல்லை இடையே சிறப்பு ரெயில்: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

    தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை எழும்பூர்-நெல்லை இடையே பகல் நேர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தீபாவளி பண்டிகையையொட்டி பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னை எழும்பூர்-நெல்லை இடையே பகல் நேர சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு கட்டண ரெயில் (வ.எண்.06037) இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு புறப்பட்டு மாலை 6.45 மணிக்கு நெல்லை சென்றடையும். நெல்லையில் இருந்து வருகிற 31-ந்தேதி சிறப்பு கட்டண ரெயில் (வ.எண்.06038) அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு மாலை 6.20 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.

    இதேபோல சிறப்பு கட்டண ரெயில் (வ.எண்.06001) நவம்பர் 11-ந்தேதி இரவு 9.05 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு நெல்லை சென்றடையும். நெல்லையில் இருந்து சுவிதா சிறப்பு ரெயில் (வ.எண்.82602) நவம்பர் 13-ந்தேதி பிற்பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.

    சென்னை சென்டிரலில் இருந்து சுவிதா சிறப்பு கட்டண ரெயில் (வ.எண்.82621) நவம்பர் 11-ந்தேதி இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

    மறுமார்க்கமாக எர்ணாகுளத்தில்இருந்து சுவிதா சிறப்பு கட்டண ரெயில் (வ.எண்.82622) நவம்பர் 13-ந்தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×