search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேப்பனப்பள்ளி அருகே லாரி மோதி கோவில் நுழைவாயில் சுவர் உடைந்து சேதம்
    X

    வேப்பனப்பள்ளி அருகே லாரி மோதி கோவில் நுழைவாயில் சுவர் உடைந்து சேதம்

    வேப்பனப்பள்ளி அருகே மர பாரம் ஏற்றி வந்த லாரி மோதி கோவில் நுழைவாயில் சுவர் உடைந்து சேதம் அடைந்தது.
    வேப்பனப்பள்ளி அருகே உள்ளது காரகுப்பம். இந்த கிராமத்தில் பச்சைமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் வழியில் நுழைவாயில் உள்ளது. இந்த நுழைவாயிலில் சாமி சிலைகள் இருந்தன.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மர பாரத்தை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது. அப்போது லாரியின் மேல் பகுதி நுழைவாயில் சுவற்றில் இடித்தது. இதில் சாமி சிலைகள் உடைந்தன. மேலும் அந்த சுவர் உடைந்து சாயும் நிலையில் உள்ளது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கிராம மக்கள் அங்கு கூடினார்கள். அது தொடர்பாக வேப்பனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×