என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வக்கீல் வீடு தாக்கப்பட்ட வழக்கு: சசிகலா புஷ்பா எம்.பி.யை கைது செய்ய ஐகோர்ட்டு தடை
Byமாலை மலர்27 Oct 2016 2:08 AM GMT (Updated: 27 Oct 2016 2:08 AM GMT)
திசையன்விளை பெண் வக்கீல் வீடு தாக்கப்பட்ட வழக்கில் சசிகலா புஷ்பா எம்.பி.யை கைது செய்ய மதுரை ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.
மதுரை:
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி., அவருடைய குடும்பத்தினர் மீது நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆனைகுடியை சேர்ந்த 2 பெண்கள் பாலியல் புகார் அளித்தனர். இந்த வழக்கில் புகார் கூறிய பெண்களுக்கு ஆதரவாக திசையன்விளை பெண் வக்கீல் சுகந்திஜெய்சன் ஆஜரானார். இந்நிலையில், சுகந்திஜெய்சன் கொச்சிக்கு சென்றிருந்தபோது திசையன்விளையில் உள்ள அவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர்.
இதுதொடர்பாக திசையன்விளை போலீசார், சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர்கள் ஹரி, ராமலிங்கம், சித்ராகுமார் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சசிகலா புஷ்பா, அவருடைய கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப்ராஜா ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி பி.கோகுல்தாஸ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணையை வருகிற 2-ந் தேதிக்கு தள்ளிவைத்தும், அதுவரை இந்த வழக்கில் சசிகலா புஷ்பா எம்.பி., அவருடைய கணவர், மகன் ஆகியோரை கைது செய்ய தடை விதித்தும் உத்தரவிட்டார்.
அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி., அவருடைய குடும்பத்தினர் மீது நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆனைகுடியை சேர்ந்த 2 பெண்கள் பாலியல் புகார் அளித்தனர். இந்த வழக்கில் புகார் கூறிய பெண்களுக்கு ஆதரவாக திசையன்விளை பெண் வக்கீல் சுகந்திஜெய்சன் ஆஜரானார். இந்நிலையில், சுகந்திஜெய்சன் கொச்சிக்கு சென்றிருந்தபோது திசையன்விளையில் உள்ள அவரது வீட்டின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர்.
இதுதொடர்பாக திசையன்விளை போலீசார், சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர்கள் ஹரி, ராமலிங்கம், சித்ராகுமார் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சசிகலா புஷ்பா, அவருடைய கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதீப்ராஜா ஆகியோர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி பி.கோகுல்தாஸ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, விசாரணையை வருகிற 2-ந் தேதிக்கு தள்ளிவைத்தும், அதுவரை இந்த வழக்கில் சசிகலா புஷ்பா எம்.பி., அவருடைய கணவர், மகன் ஆகியோரை கைது செய்ய தடை விதித்தும் உத்தரவிட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X