search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியலூர் மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் 28-ந்தேதி நடக்கிறது
    X

    அரியலூர் மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் 28-ந்தேதி நடக்கிறது

    அரியலூர் மாவட்டத்தில் அம்மா திட்ட முகாம் 28-ந்தேதி நடக்கிறது. இத்தகவலை கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டத்திலும் மூன்றாம் கட்டமாக தலா ஒரு கிராமம் வீதம் அம்மா திட்ட முகாம் 28.10.2016 அன்று வருவாய் வட்டாட்சியர் தலைமையில் பின்வருமாறு நடைபெற உள்ளது.

    உடையார்பாளையம் வட்டத்தில் மணகெதி, பாப்பாகுடி (வ), தத்தனூர் (கி) கிராமங்களில் நடைபெறுகிறது. நான்காம் கட்டமாக அரியலூர் வட்டத்தில் கோவில் எசனை (மே), கீழகொளத்தூர் கிராமங்களிலும், செந்துறை வட்டத்தில் துளார் கிராமத்தில் நடைபெறுகிறது.

    இம்முகாமில் வருவாய்த்துறையின் சமூகப் பாது காப்புத்திட்டங்கள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப் பட்டாக்கள், பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவற்றில் தகுதி பெற்ற மனுக்களின் மீது உடனடியாக தீர்வு வழங்கப்படும்.பொதுமக்கள் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இத்தகவலை கலெக்டர் சரவணவேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×