search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி நெடுகன்பட்டி தர்காவில் கூட்டு பிரார்த்தனை
    X

    தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி நெடுகன்பட்டி தர்காவில் கூட்டு பிரார்த்தனை

    கீரனூரை அடுத்த நெடுகன்பட்டியில் பிரசித்தி பெற்ற சீர்சாயபு ஒளியுல்லா தர்கா உள்ளது. இந்த தர்காவில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் இணைந்து நடத்திய கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

    கீரனூர்:

    கீரனூரை அடுத்த நெடுகன்பட்டியில் பிரசித்தி பெற்ற சீர்சாயபு ஒளியுல்லா தர்கா உள்ளது. இந்த தர்காவில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் இணைந்து நடத்திய கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.

    அதே போல் மந்தபிடாரி அம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கந்தர்வக்கோட்டை தொகுதி எம்.எல்.ஏ ஆறுமுகம், குன்றாண்டார் கோவில் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் பால்ராஜ், கூட்டுறவு வங்கி தலைவர் பவுண் துரை, அவைத்தலைவர் நாசர், கிளைச்செயலாளர் ராமச்சந்திரன், அய்யப்பன், ரபீக், முருகேசன் ராமர், ஜெயராமன், ஆகியோர் மற்றும் சுற்றுவட்டார அ.தி.மு.க.வினர், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

    பூஜையின் முடிவில் அனைவருக்கும் இனிப்பு பொங்கல் மற்றும் பூந்தி வழங்கப்பட்டது.

    Next Story
    ×