என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பரோலில் வந்த ஆயுள் கைதி தப்பி ஓட்டம்
Byமாலை மலர்26 Oct 2016 10:03 AM GMT (Updated: 26 Oct 2016 10:03 AM GMT)
புழல் ஜெயிலில் இருந்து பரோலில் வந்த ஆயுள் கைதி ஓட்டம் பிடித்தார்.
சென்னை:
சென்னை பெரியமேடு நேவல் ஆஸ்பத்திரி 7-வது தெருவை சேர்ந்தவர் ஜானி (35). புளியந்தோப்பு பகுதிகளில் குற்ற வழக்குகளில் இவர் ஈடுபட்டு வந்தார். ஆயுள் தண்டனை கைதியான ஜானி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கடந்த 19-ந்தேதி அன்று ஜானி பரோலில் சிறையில் இருந்து வெளிவந்தார். 23-ந்தேதி வரை பரோலில் செல்ல சிறைத்துறை அவருக்கு அனுமதி அளித்து இருந்தது.
பரோல் முடிந்த பின்னர் ஜானி புழல் சிறைக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் அவர் அங்கு செல்லாமல் தலைமறைவாகிவிட்டார்
இதுபற்றி சிறைத்துறை சார்பில் புழல் சூப்பிரண்டு, வேப்பேரி போலீசில் புகார் செய்தார். ஆயுள் கைதி ஜானியின் வீடு வேப்பேரி போலீஸ் எல்லையில் இருப்பதால் அங்கு புகார் செய்யப்பட்டது.
ஜானி எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. அவரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ஜானியின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களது செல்போன் எண்களையும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். இதன் மூலமாக ஜானியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை பெரியமேடு நேவல் ஆஸ்பத்திரி 7-வது தெருவை சேர்ந்தவர் ஜானி (35). புளியந்தோப்பு பகுதிகளில் குற்ற வழக்குகளில் இவர் ஈடுபட்டு வந்தார். ஆயுள் தண்டனை கைதியான ஜானி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
கடந்த 19-ந்தேதி அன்று ஜானி பரோலில் சிறையில் இருந்து வெளிவந்தார். 23-ந்தேதி வரை பரோலில் செல்ல சிறைத்துறை அவருக்கு அனுமதி அளித்து இருந்தது.
பரோல் முடிந்த பின்னர் ஜானி புழல் சிறைக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் அவர் அங்கு செல்லாமல் தலைமறைவாகிவிட்டார்
இதுபற்றி சிறைத்துறை சார்பில் புழல் சூப்பிரண்டு, வேப்பேரி போலீசில் புகார் செய்தார். ஆயுள் கைதி ஜானியின் வீடு வேப்பேரி போலீஸ் எல்லையில் இருப்பதால் அங்கு புகார் செய்யப்பட்டது.
ஜானி எங்கு சென்றார் என்பது தெரியவில்லை. அவரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர்.
இதுதொடர்பாக ஜானியின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களது செல்போன் எண்களையும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். இதன் மூலமாக ஜானியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X