search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
    X

    மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

    மதுரையில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை மாநகராட்சி 30-வது வார்டு அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயக்குமார் (வயது42). இவரது வீடு தாசில்தார் நகர் மருதுபாண்டியர் தெருவில் உள்ளது.

    நேற்று நள்ளிரவு வீட்டில் அனைவரும் தூங்கி கொண்டிருந்தபோது வீட்டின் முன்பக்க பகுதியில் திடீரென பயங்கர சத்தம் கேட்டது. உடனே ஜெயக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வெளியே வந்து பார்த்தபோது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீட்டின் முன்பக்க கதவில் வீசியது தெரியவந்தது. பாட்டில் சிதறல்கள் சிதறி கிடந்தன. இதில் கதவின் கீழ் பகுதியில் சேதம் ஏற்பட்டது.

    இதுகுறித்து ஜெயக்குமார் அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கவுன்சிலர் பதவி நேற்று முடிந்த நிலையில் ஜெயக்குமார் வீட்டில் நடந்த இந்த சம்பவம் அ.தி.மு.க.வினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×