என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
செஞ்சியில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும்: பா.ஜனதா செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
விழுப்புரம் கிழக்கு மாவட்ட பாரதீய ஜனதா சிறப்பு செயற்குழு கூட்டம் செஞ்சி வள்ளி அண்ணாமலை திருமண மண்டபத்தில் மாவட்ட தலைவர் விநாயகம் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநில துணைத் தலைவர் சரவணன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சிவ.தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
எதிர்வரும் பருவ மழை காலத்தை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள ஏரிகள், கால்வாய்கள் தூர்வாரப்பட்டு மழை நீரை சேமிக்க வேண்டும்.
தூய்மை பாரத பணியின் அடிப்படையில் டெங்கு, மலேரியா வராமல் தடுக்க குப்பைகளை அகற்றி கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
செஞ்சி பகுதியில் புதிய தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்.
செஞ்சியில் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் அன்பழகன், ஜெயக்குமார், சுகுமார், மாவட்ட துணைத் தலைவர்கள் பாண்டியன், மோகன் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்