என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சைதாப்பேட்டை கோர்ட்டு வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட கிளை சிறைச்சாலைக்கு 129 கைதிகள் மாற்றப்பட்டனர்
Byமாலை மலர்24 Oct 2016 10:18 AM GMT (Updated: 24 Oct 2016 10:19 AM GMT)
சைதாப்பேட்டை கோர்ட்டு வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட கிளை சிறைச்சாலை செயல்பாட்டுக்கு வந்ததையடுத்து, புழல் சிறையில் இருந்த 129 கைதிகளும் பலத்த பாதுகாப்புடன் சைதாப்பேட்டைக்கு மாற்றப்பட்டனர்.
சென்னை:
சைதாப்பேட்டை கோர்ட்டு வளாகத்தில் உள்ள கிளை சிறைச்சாலை பழுதானதை தொடர்ந்து 2014-ம் ஆண்டு அதனை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது.
கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு 28-ந்தேதி சிறையை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கின. இதனால் அங்கிருந்த 129 சிறை கைதிகள் புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர். இவர்கள் கொலை முயற்சி, திருட்டு வழிப்பறி வழக்குகளில் கைதானவர்கள். இவர்கள் புழல் சிறையில் விசாரணை கைதிகள் இருக்கும் அறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சைதாப்பேட்டை கிளை சிறை புதுப்பிக்கும் பணி முடிந்து நேற்று செயல்பாட்டுக்கு வந்தது. இதை தொடர்ந்து புழல் சிறையில் இருந்த 129 கைதிகளும் சைதாப்பேட்டைக்கு மாற்றப்பட்டனர். நேற்று மாலை 3 வேன்களில் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு சைதாப்பேட்டை கிளை சிறையில் அனைவரும் அடைக்கப்பட்டனர்.
சைதாப்பேட்டை கோர்ட்டு வளாகத்தில் உள்ள கிளை சிறைச்சாலை பழுதானதை தொடர்ந்து 2014-ம் ஆண்டு அதனை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது.
கடந்த 2014-ம் ஆண்டு ஆகஸ்டு 28-ந்தேதி சிறையை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கின. இதனால் அங்கிருந்த 129 சிறை கைதிகள் புழல் சிறைக்கு மாற்றப்பட்டனர். இவர்கள் கொலை முயற்சி, திருட்டு வழிப்பறி வழக்குகளில் கைதானவர்கள். இவர்கள் புழல் சிறையில் விசாரணை கைதிகள் இருக்கும் அறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் சைதாப்பேட்டை கிளை சிறை புதுப்பிக்கும் பணி முடிந்து நேற்று செயல்பாட்டுக்கு வந்தது. இதை தொடர்ந்து புழல் சிறையில் இருந்த 129 கைதிகளும் சைதாப்பேட்டைக்கு மாற்றப்பட்டனர். நேற்று மாலை 3 வேன்களில் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு சைதாப்பேட்டை கிளை சிறையில் அனைவரும் அடைக்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X