search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பவானி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
    X

    பவானி அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

    முதியோர் உதவித்தொகை வாங்க சென்றவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

    ஈரோடு:

    பவானியை அடுத்த சோவராயன்பாளையம், தேற்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது85).

    சம்பவத்தன்று தங்கவேல் முதியோர் உதவி தொகை வாங்குவதற்காக திப்பி செட்டிபாளையத்திலிருந்து ஆப்பக்கூடல்-பவானி மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத வகையில் தங்கவேல் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் தலையின் பலத்த காயம் அடைந்து உயிருக்காக போராடினார்.

    அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.எனினும் சிகிச்சை பலனின்றி தங்கவேல் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து பவானி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×