என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
புதுக்கோட்டையில் ஆசிரியர் வீட்டில் 30பவுன் நகை கொள்ளை
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அசோக் நகர் அண்ணா நகரை சேர்ந்தவர் கண்ணன். (வயது 38). இவர் திருகோகர்ணத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி புவனேஷ்வரி. (35). இவர் காந்திநகர் அரசு பள்ளயில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்கள் வெள்ளிக்கிழமை அன்று தங்களது குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் காரைக்குடியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது அவர்கள் வீட்டின் உள்ளே உள்ள கதவை பூட்டாமல் வீட்டின் வெளியே உள்ள இரும்பு கேட்டை மட்டும் பூட்டி விட்டு சென்றிருந்தனர். பின்னர் நேற்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க இரும்பு கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்து கதவு திறந்துக் கிடந்ததை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த தங்கத்தோடு, தங்க மோதிரம் உள்பட 30 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் கொள்ளை அடித்து சென்றிருப்பது தெரியவந்தது. இதன் பின் கணேஷ் நகர் காவல்நிலையத்தில் கண்ணன் புகார் கொடுத்தார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்