என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல் அருகே சரக்கு வாகனம் பாலத்தில் மோதி 2 பேர் பலி
Byமாலை மலர்21 Oct 2016 4:17 PM GMT (Updated: 21 Oct 2016 4:17 PM GMT)
நாமக்கல் அருகே சரக்கு வாகனம் பாலத்தில் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
நாமக்கல்:
தேனி மாவட்டம் காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் செல்லையா. இவரது மகன் காளியப்பன் (வயது 25). இவர் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து தொழில் செய்து வந்தார். இவரது சரக்கு வாகனத்தை வேப்பம்பட்டியை சேர்ந்த காளிராஜ் (28) என்பவர் ஓட்டி வந்தார். தேனி மாவட்டம் ஓடப்பள்ளியை சேர்ந்த விவசாயி காளிமுத்து என்பவரின் தோட்டத்தில் இருந்து திராட்சை பழம் பாரத்தை ஏற்றிக்கொண்டு காளியப்பனின் சரக்கு வாகனம் பெங்களூரு சென்றது. இவர்களுடன் உத்தமபாளையத்தை சேர்ந்த அஜித் (21) என்பவரும் உடன் சென்றார்.
பெங்களூருவில் திராட்சை பழத்தை இறக்கி விட்டு, நாமக்கல் வழியாக மீண்டும் தேனி நோக்கி சென்று கொண்டு இருந்தனர். நாமக்கல் அருகே உள்ள கருப்பட்டிபாளையம் பிரிவு அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக சரக்கு வாகனம் பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதியது.
இந்த விபத்தில் வாகனத்தின் உரிமையாளர் காளியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த டிரைவர் காளிராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன்இன்றி காளிராஜூம் இறந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அஜித் நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து நாமக்கல் நல்லிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் செல்லையா. இவரது மகன் காளியப்பன் (வயது 25). இவர் சொந்தமாக சரக்கு வாகனம் வைத்து தொழில் செய்து வந்தார். இவரது சரக்கு வாகனத்தை வேப்பம்பட்டியை சேர்ந்த காளிராஜ் (28) என்பவர் ஓட்டி வந்தார். தேனி மாவட்டம் ஓடப்பள்ளியை சேர்ந்த விவசாயி காளிமுத்து என்பவரின் தோட்டத்தில் இருந்து திராட்சை பழம் பாரத்தை ஏற்றிக்கொண்டு காளியப்பனின் சரக்கு வாகனம் பெங்களூரு சென்றது. இவர்களுடன் உத்தமபாளையத்தை சேர்ந்த அஜித் (21) என்பவரும் உடன் சென்றார்.
பெங்களூருவில் திராட்சை பழத்தை இறக்கி விட்டு, நாமக்கல் வழியாக மீண்டும் தேனி நோக்கி சென்று கொண்டு இருந்தனர். நாமக்கல் அருகே உள்ள கருப்பட்டிபாளையம் பிரிவு அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக சரக்கு வாகனம் பாலத்தின் தடுப்பு சுவர் மீது மோதியது.
இந்த விபத்தில் வாகனத்தின் உரிமையாளர் காளியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த டிரைவர் காளிராஜை அருகில் உள்ளவர்கள் மீட்டு, நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன்இன்றி காளிராஜூம் இறந்தார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த அஜித் நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த விபத்து குறித்து நாமக்கல் நல்லிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X