என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கடலூரில் போலீஸ் ஏட்டுவை தாக்கி கொலை மிரட்டல்: வாலிபர் கைது
கடலூர்:
கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிபவர் இளமாறன் (வயது 46). இன்று அதிகாலை கடலூர் வில்வநகரில் ரோந்துபணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பகவதி அம்மன்கோவில் தெருவில் வாலிபர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.
சந்தேகமடைந்த இளமாறன் அந்த வாலிபரிடம் ஏன் வெகுநேரமாக இங்கு நிற்கிறாய் என்று கேட்டார். ஆத்திரமடைந்த வாலிபர் கீழே கிடந்த கல்லால் இளமாறனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து அந்த வாலிபர் தப்பி ஓடினார். உடனே இளமாறன் ஓடி சென்று அவரை பிடிக்க முயன்றார் ஆனால் முடியவில்லை.
இதுகுறித்து இளமாறன் கடலூர் புதுநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து வாலிபரை தேடி வந்தனர். அப்போது கல்லால் தாக்கியவர் வில்வநகர் பகவதியம்மன்கோவில் தெருவை சேர்ந்த அருண்குமார் (23) என்பது தெரியவந்தது. உடனே அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்