search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீளமேட்டில் கல்லூரி மாணவர் தற்கொலை
    X

    பீளமேட்டில் கல்லூரி மாணவர் தற்கொலை

    பீளமேட்டில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    பெங்களூரை சேர்ந்தவர் இளவழகன். இவரது மகன் மோகன்(வயது 18). இவர் கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து வந்தார்.

    பாலாஜி நகரில் ஒரு வீட்டில் நண்பர்களுடன் வாடகைக்கு தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.

    நேற்று மாலை தனது அறையில் யாரும் இல்லாத நேரத்தில் மோகன் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்றிருந்த நண்பர்கள் அறைக்கு திரும்பிய போது மோகன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் பீளமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    மோகனுக்கு நடனத்தில் மிகவும் ஆர்வம் உண்டு. கல்லூரியில் நடைபெறும் அனைத்து விழாக்களிலும் மோகன் பங்கேற்று நடனமாடுவது வழக்கம்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மோகனுக்கு ஒரு விபத்தில் காலில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மோகனால் நடனமாட முடியவில்லை.

    இதனால் மோகன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். நண்பர்கள் அவரை தேற்றி வந்துள்ளனர். இந்த வருத்தத்தில் மோகன் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    Next Story
    ×