என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தஞ்சையில் ஓடும் பஸ்சில் இருந்து இறங்கிய என்ஜினீயர் மாணவர் பலி
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள பெருமா நல்லூரை சேர்ந்தவர் ஆனந்தன். இவருடைய மகன் ஜெயசூர்யா(வயது18). இவர் தஞ்சை அருகே உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம்.
சம்பவத்தன்று இவர், கல்லூரி முடிந்தவுடன் நண்பர்களுடன் கல்லூரியை விட்டு வெளியே வந்தார். கல்லூரி முன்புள்ள பஸ் நிறுத்தத்தில் இருந்து அரசு பஸ்சில் ஏறி தஞ்சை புதிய பஸ் நிலையத்திற்கு பயணம் செய்தார். புதிய பஸ் நிலையத்திற்குள் பஸ் திரும்பியபோது, பஸ் மெதுவாக சென்றதால் ஓடும் பஸ்சில் இருந்து கல்லூரி மாணவர்கள் சிலர் கீழே இறங்கினர்.
இதை பார்த்த ஜெயசூர்யாவும் கீழே இறங்கினார். அப்போது தவறி கீழே விழுந்ததில் ஜெயசூர்யாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே சக மாணவர்கள் அவரை மீட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு ஜெயசூர்யா கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து தஞ்சை மருத்துவகல்லூரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்