search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெரினாவில் குளித்த ஆம்பூர் கல்லூரி மாணவர்கள் 2 பேர் கடலில் மூழ்கினர்
    X

    மெரினாவில் குளித்த ஆம்பூர் கல்லூரி மாணவர்கள் 2 பேர் கடலில் மூழ்கினர்

    சென்னை மெரினா கடலில் குளித்த ஆம்பூர் கல்லூரி மாணவர்கள் 2 பேர் ராட்சத அலையில் சிக்கி கடலில் மூழ்கினர்.
    வேலூர்:


    வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் நவீல் அகமது (வயது 20), ஷாசாமல் (19). இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகின்றனர். நேற்று மாலை நண்பர்கள் இருவரும் மெரினா கடற்கரையில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். காவல் துறையின் எச்சரிக்கை பகுதியை மீறி ஆழமான கடல் பகுதியில் குளித்துள்ளனர்.

    அப்போது திடீரென வந்த ராட்சத அலை அவர்கள் இருவரையும் கடலுக்குள் இழுத்துச் சென்றது. இதை பார்த்த கரையில் நின்றவர்கள் மெரினா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவலின் பெயரில் விரைந்து வந்த போலீசார், கடலோர காவல் படையினருடன் இணைந்து கடலில் மூழ்கிய நவீல் அகமது மற்றும் ஷாசாமலை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×