என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய கம்யூனிஸ்டு தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை: முத்தரசன் அறிவிப்பு
Byமாலை மலர்30 Sep 2016 8:08 AM GMT (Updated: 30 Sep 2016 8:08 AM GMT)
இந்திய கம்யூனிஸ்டு கட்சி தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்று மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
சென்னை:
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மக்கள் நலக் கூட்டணியில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியன வரும் உள்ளாட்சி தேர்தலில் இணைந்து போட்டியிடுவது என்றும், போட்டியிடும் தொகுதிகள் குறித்து மாவட்ட அளவில் பேசி உடன்பாடு காண்பது என்றும் முடிவு செய்துள்ளன.
இதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் நலக் கூட்டணி கட்சிகள் மாவட்ட அளவில் பேசி உடன்பாடு கண்டு வருகின்றன.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.க.வுடன் கூட்டணி? அமைத்துள்ளதாக விஷமச் செய்தி வெளியாகியுள்ளது. இது மிகத் தவறான செய்தியாகும். உள்ளூர் செய்தியாளர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அச்செய்தி வெளியிட்டு இருப்பதாக தெரிகின்றது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நேர்மைக்கு களங்கம் கற்பிக்கும் தீய உள் நோக்கத்துடன், செய்தியாளர் கொடுத்துள்ள செய்தியை அந்நாளேடு வெளியிட்டுள்ளது. தற்போது மட்டுமல்ல, இச்செய்தியாளர் இப்படிபட்ட தவறுகளை தொடர்ந்து செய்து வருகிறார். அவர் தான் பணியாற்றும் நாளிதழை தனது சுயநலத் தேவைக்காக தவறாக பயன்படுத்தி வருகின்றார்.
திருவாரூர் மாவட்டம் மட்டுமல்ல தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திலும், எந்த மட்டத்திலும், தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ், பா.ம.க ஆகிய கட்சிகளுடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித உடன்பாடும் செய்து கொள்ளவில்லை.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும், மக்கள் நலக்கூட்டணிக்கு எதிராகவும் திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறுகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கின்றது.
கட்சி தோழர்கள் வதந்திகளுக்கும், அவதூறுகளுக்கும் இடமளிக்காது, கட்சியின் வெற்றிக்கும், மக்கள் நலக் கூட்டணி வெற்றிக்கும் அயராது பாடுபட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மக்கள் நலக் கூட்டணியில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியன வரும் உள்ளாட்சி தேர்தலில் இணைந்து போட்டியிடுவது என்றும், போட்டியிடும் தொகுதிகள் குறித்து மாவட்ட அளவில் பேசி உடன்பாடு காண்பது என்றும் முடிவு செய்துள்ளன.
இதன் அடிப்படையில் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் நலக் கூட்டணி கட்சிகள் மாவட்ட அளவில் பேசி உடன்பாடு கண்டு வருகின்றன.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தி.மு.க.வுடன் கூட்டணி? அமைத்துள்ளதாக விஷமச் செய்தி வெளியாகியுள்ளது. இது மிகத் தவறான செய்தியாகும். உள்ளூர் செய்தியாளர் கொடுத்த தகவலின் அடிப்படையில் அச்செய்தி வெளியிட்டு இருப்பதாக தெரிகின்றது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் நேர்மைக்கு களங்கம் கற்பிக்கும் தீய உள் நோக்கத்துடன், செய்தியாளர் கொடுத்துள்ள செய்தியை அந்நாளேடு வெளியிட்டுள்ளது. தற்போது மட்டுமல்ல, இச்செய்தியாளர் இப்படிபட்ட தவறுகளை தொடர்ந்து செய்து வருகிறார். அவர் தான் பணியாற்றும் நாளிதழை தனது சுயநலத் தேவைக்காக தவறாக பயன்படுத்தி வருகின்றார்.
திருவாரூர் மாவட்டம் மட்டுமல்ல தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திலும், எந்த மட்டத்திலும், தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, காங்கிரஸ், பா.ம.க ஆகிய கட்சிகளுடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித உடன்பாடும் செய்து கொள்ளவில்லை.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும், மக்கள் நலக்கூட்டணிக்கு எதிராகவும் திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறுகளை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கின்றது.
கட்சி தோழர்கள் வதந்திகளுக்கும், அவதூறுகளுக்கும் இடமளிக்காது, கட்சியின் வெற்றிக்கும், மக்கள் நலக் கூட்டணி வெற்றிக்கும் அயராது பாடுபட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு இரா.முத்தரசன் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X