என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நொய்யல் அருகே வைக்கோல் போரில் தீ விபத்து
நொய்யல்:
கரூர் மாவட்டம், நொய்யல் புதுகுறுக்குபாளையத்தை சேர்ந்தவர் தங்கேவல் (வயது55) இவர் வீட்டின் அருகே மாடுகளுக்கு தீவனம் போடுவதற்காக வைக்கோல் போர் வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வைக்கோல் போர் திடீரென தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை.
இது குறித்து தங்கவேல் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு, தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் நிலைய அலுவலர் (பொ) சுப்பிரமணியன் தலைமையில் ஜெர்மையா, சீரங்கன், கலைச்செல்வன், நடராஜன், இராதாகிருஷ்ணன், கார்த்தி கேயன், செல்வம், ஆகியோர் கொண்ட குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வைக்கோல் போரில் வேகமாக எரிந்து கொண்டு இருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தி தீ அருகிலிருந்த வீடுகளுக்கு பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் ரூ.70 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் தீயில் எரிந்து நாசமாயின.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்