search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சவுகார்பேட்டையில் கடையை உடைத்து ரூ.8 லட்சம் கொள்ளையில் 2 வாலிபர்கள் கைது
    X

    சவுகார்பேட்டையில் கடையை உடைத்து ரூ.8 லட்சம் கொள்ளையில் 2 வாலிபர்கள் கைது

    சவுகார்பேட்டையில் கடையை உடைத்து ரூ.8 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    புரசைவாக்கம் பிரிக்ளின் 4-வது பிளாக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் லலித்குமார். சவுகார்பேட்டை ஜெனரல் முத்தையா தெருவில் மின்சாதன பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

    கடந்த 30-ந்தேதி இரவு இவரது கடை பூட்டை உடைத்து புகுந்த மர்மகும்பல் ரூ.8 லட்சத்தை லாக்கருடன் பெயர்த்து கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இது குறித்து யானைகவுனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கடைக்கு குடி தண்ணீர் சப்ளை செய்யும் ஊழியர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரமேஷ்குமாவத், சவுகார்பேட்டையை சேர்ந்த நாதுராம் ஆகியோர் கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது.

    அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சம், 2 செல்போன்கள பறிமுதல் செய்யப்பட்டது.

    தைதான இருவரும் லலித்குமாரின் கடைக்கு வழக்கமாக குடி தண்ணீர் கேன் சப்ளை செய்து இருக் கிறார்கள். கடையில் அதிக அளவு பணப் புழக்கம் இருப்பதை நோட்ட மிட்டு அவர்கள் கொள் ளையில் ஈடுபட்டதாக தெரிவித்து உள்ளனர்.
    Next Story
    ×