search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரூர் மாவட்ட தே.மு.தி.க. புதிய நிர்வாகிகள் அறிவிப்பு
    X

    கரூர் மாவட்ட தே.மு.தி.க. புதிய நிர்வாகிகள் அறிவிப்பு

    கரூர் மாவட்ட தே.மு.தி.க.வில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி அவை தலைவராக அரவை எம்.முத்து,மாவட்ட துணை செயலாளர்களாக கஸ்தூரி என். தங்கராஜ், சோமூர் ஏ. ரவி, பி. சுரேஷ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    கரூர்:

    கரூர் மாவட்ட தே.மு.தி.க.வில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி அவை தலைவராக அரவை எம்.முத்து,மாவட்ட துணை செயலாளர்களாக கஸ்தூரி என். தங்கராஜ், சோமூர் ஏ. ரவி, பி. சுரேஷ் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும் ஒன்றிய செயலாளர்களாக கே.எஸ்.டி. கந்தசாமி (பரமத்தி), வி.சுப்பிரமணி (கிருஷ்ண ராயபுரம்), வி.சக்திவேல் (தோகைமலை),எஸ்.ஆர். ஜெயக்குமார் (கரூர்), டி.தங்க மாரியப்பன்(அரவக்குறிச்சி), எஸ்.சாமுவேல் (தான்தோணி), சிவம். பி. ராஜேந்திரன் (கடவூர்)ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.

    பேரூர் கழக செயலா ளர் களாக ஆர். முத்துக்குமார்(பழைய ஜெயங்கொண்டான்), அய்யப்பன்(கிருஷ்ண ராயபுரம்), கண்ணன் (நங்கவரம்) பி.சிவ ராமன் (மருதூர்) ஆகியோரும், கேப்டன் மன்ற செயலாளராக பி.எம். மாணிக்கம், துணை செயலாளர் களாக கார்த்திகேயன், பெரியண்ணன் ஆகியோரும், இளைஞரணி மாவட்ட செயலாளராக ஆர். ரங்கநான், துணை செயலாளராக கோபால கிருஷ்ணன் ஆகியோரும் புதிய நிர்வாகிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

    மாணவரணி செயலாளராக நவநீத கிருஷ்ணன், துணை செயலாளர்களாக கனகராஜ், குண செல்வம், மகளிர் அணி செயலாளராக கமலம், வக்கீல் அணி செயலாளராக பால சந்திரன், தொண்டரணி செயலாளராக கே.பி. பழனிச்சாமி ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இதற்கான உத்தரவினை கட்சியின் தலைவர் விஜயகாந்த் பிறப்பித்துள்ளார். இவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு விஜயகாந்த் கேட்டு கொண்டுள்ளார். இதையடுத்து புதிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் கே.வி. தங்கவேலை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    Next Story
    ×