search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    செட்டியாபத்தில் தொழிலாளிக்கு அடி-உதை: வாலிபர் கைது
    X

    செட்டியாபத்தில் தொழிலாளிக்கு அடி-உதை: வாலிபர் கைது

    செட்டியாபத்தில் தொழிலாளியை அடித்து உதைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    உடன்குடி:

    ஆறுமுகநேரி முத்து கிருஷ்ணாபுரத்தை சோந்தவர் பிச்சமுத்து (வயது 62). கூலி தொழிலாளி. இவரது மகள் சக்தி ஈஸ்வரி. இவர் திருமணமாகி செட்டியாபத்தில் உள்ளார். அவரை பார்ப்பதற்கு பிச்சமுத்து செட்டியாபத்திற்கு சென்றார்.

    இந்நிலையில் சக்தி ஈஸ்வரிக்கும் அதே பகுதியை சேர்ந்த சரவணனுக்கும் முன்விரோதத்தில் தகறாறு ஏற்பட்டது. அப்போது மகளுக்கு ஆதரவாக பிச்ச முத்து பேசினார். இதனால் ஆத்திரமடைந்த சரவணன் மகன் தேவராஜ் (19) என்பவர் பிச்சமுத்துவை அடித்து உதைத்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த பிச்ச முத்து திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்த குலசேகரன் பட்டினம் போலீசார் வாலிபர் தேவராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

    Next Story
    ×