என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூரில் நள்ளிரவில் இந்து முன்னணி பிரமுகரை பின் தொடர்ந்த மர்ம நபர்கள்
Byமாலை மலர்28 Sep 2016 6:35 AM GMT (Updated: 28 Sep 2016 6:36 AM GMT)
திருப்பூரில் நள்ளிரவில் இந்து முன்னணி பிரமுகரை பின் தொடர்ந்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் வீரபாண்டி செட்டிப்பாளையம் டி.பி.என். கார்டன் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (40). இவர் இந்து முன்னணியின் திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவராக உள்ளார்.
நேற்று இவர் பழவஞ்சி பாளையம் என்ற பகுதியில் உள்ள தனது பனியன் கம்பெனிக்கு சென்று விட்டு நள்ளிரவு 1 மணியளவில் காரில் வீடு திரும்பினார். வீரபாண்டி அருகே சென்று கொண்டு இருந்த போது ஒரே மோட்டார் சைக்கிளில் 3 மர்ம நபர்கள் இவரை பின் தொடர்ந்து வந்தனர்.
இதைப்பார்த்த அண்ணாதுரை காரை வேகமாக ஓட்டினார். ஆனாலும் அந்த நபர்கள் காரை முந்தி சென்று நடுரோட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினர். அப்போது சுதாரித்து கொண்ட அண்ணாதுரை காரை இடது புறமாக திருப்பி கொண்டு வேகமாக சென்று விட்டார்.
பின்னர் திருப்பூர் மாநகர போலீசில் இந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். உடனடியாக மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டது. கமிஷனர் சஞ்சய் மாத்தூர், துணை கமிஷனர் திஷா மிட்டல் மற்றும் போலீசார் வீரபாண்டி பகுதிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் முருகேசனுக்கும் மர்ம நபர்கள் பேஸ்புக்கில் மிரட்டல் விடுத்து உள்ளனர். இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர் வீரபாண்டி செட்டிப்பாளையம் டி.பி.என். கார்டன் பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (40). இவர் இந்து முன்னணியின் திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவராக உள்ளார்.
நேற்று இவர் பழவஞ்சி பாளையம் என்ற பகுதியில் உள்ள தனது பனியன் கம்பெனிக்கு சென்று விட்டு நள்ளிரவு 1 மணியளவில் காரில் வீடு திரும்பினார். வீரபாண்டி அருகே சென்று கொண்டு இருந்த போது ஒரே மோட்டார் சைக்கிளில் 3 மர்ம நபர்கள் இவரை பின் தொடர்ந்து வந்தனர்.
இதைப்பார்த்த அண்ணாதுரை காரை வேகமாக ஓட்டினார். ஆனாலும் அந்த நபர்கள் காரை முந்தி சென்று நடுரோட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்தினர். அப்போது சுதாரித்து கொண்ட அண்ணாதுரை காரை இடது புறமாக திருப்பி கொண்டு வேகமாக சென்று விட்டார்.
பின்னர் திருப்பூர் மாநகர போலீசில் இந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். உடனடியாக மாநகரம் மற்றும் மாவட்டம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டது. கமிஷனர் சஞ்சய் மாத்தூர், துணை கமிஷனர் திஷா மிட்டல் மற்றும் போலீசார் வீரபாண்டி பகுதிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
திருப்பூர் மாநகர் மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் முருகேசனுக்கும் மர்ம நபர்கள் பேஸ்புக்கில் மிரட்டல் விடுத்து உள்ளனர். இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X