என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேதாரண்யம் அருகே வீட்டிற்குள் நாய் புகுந்த தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
Byமாலை மலர்27 Sep 2016 12:20 PM GMT (Updated: 27 Sep 2016 12:20 PM GMT)
வேதாரண்யம் அருகே வீட்டிற்குள் நாய் புகுந்த தகராறில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வாய்மேடு போலீஸ்சரகம் சேனாதிகாடு பகுதியை சேர்ந்தவர் குமார். கொத்தனார். இவரது மனைவி கனகா (30). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடம் ஆகிறது.
இவரது பக்கத்து வீட்டில் நாகமுத்து என்பவர் வசித்து வருகிறார். அவர் வளர்க்கும் நாய் கனகா வீட்டிற்குள் புகுந்தது. இதனை அவர் தட்டிக் கேட்டார்.
இது தொடர்பாக நாகமுத்து அவரது மனைவி வசந்தா, மகள் வனிதா, மருமகன் வீரசேகர் ஆகியோர் கனகாவிடம் தகராறு செய்துள்ளனர். இதனை அவர் கணவர் வேலைக்கு சென்று வந்தவுடன் கூறியுள்ளார்.
அவர் இதனை சாதாரண பிரச்சினை என நினைத்து கொண்டு தட்டிக் கேட்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த கனகா தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். உடல் கருகிய அவர் முதலில் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவர் மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த நிலையில் கனகா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனை தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக கனகாவின் பக்கத்து வீட்டை சேர்ந்த நாகமுத்து அவரது மனைவி வசந்தா ஆகியோரை கைது செய்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள வாய்மேடு போலீஸ்சரகம் சேனாதிகாடு பகுதியை சேர்ந்தவர் குமார். கொத்தனார். இவரது மனைவி கனகா (30). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடம் ஆகிறது.
இவரது பக்கத்து வீட்டில் நாகமுத்து என்பவர் வசித்து வருகிறார். அவர் வளர்க்கும் நாய் கனகா வீட்டிற்குள் புகுந்தது. இதனை அவர் தட்டிக் கேட்டார்.
இது தொடர்பாக நாகமுத்து அவரது மனைவி வசந்தா, மகள் வனிதா, மருமகன் வீரசேகர் ஆகியோர் கனகாவிடம் தகராறு செய்துள்ளனர். இதனை அவர் கணவர் வேலைக்கு சென்று வந்தவுடன் கூறியுள்ளார்.
அவர் இதனை சாதாரண பிரச்சினை என நினைத்து கொண்டு தட்டிக் கேட்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த கனகா தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டார். உடல் கருகிய அவர் முதலில் திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவர் மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த நிலையில் கனகா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனை தொடர்ந்து தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக கனகாவின் பக்கத்து வீட்டை சேர்ந்த நாகமுத்து அவரது மனைவி வசந்தா ஆகியோரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X