என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு: மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் ரத்து- கலெக்டர் அறிவிப்பு
Byமாலை மலர்26 Sep 2016 12:13 PM GMT (Updated: 26 Sep 2016 12:13 PM GMT)
திருவாரூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்த தமிழக தேர்தல் ஆணையத்தால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்படும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்ட அலுவலர்கள் ஆகியோரால் நடத்தப்படும் மக்கள் நேர்காணல் முகாம்கள் மற்றும் இதர குறை தீர்க்கும் கூட்டங்கள் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வரும் வரை நடைபெறாது.
தேர்தல் நடத்தை விதிகள் முடிவுற்றவுடன் அனைத்து கூட்டங்களும் வழக்கம் போல் நடைபெறும் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X