search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகாசி அருகே தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை
    X

    சிவகாசி அருகே தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை

    குடிப்பழக்கத்தை பெற்றோர் கண்டித்ததால் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    சிவகாசி:

    சிவகாசி அருகே உள்ள சாத்தியாபுரத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் ஆனந்தராஜ் (வயது32), ஆட்டோ டிரைவர்.

    இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனை தந்தை கண்டித்துள்ளார். இதனால் ஆனந்தராஜ் மனவேதனை அடைந்தார்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை அவர் வீட்டில் தனியாக இருந்தார். வாழ்க்கையில் வெறுப்புற்ற நிலையில் காணப்பட்ட ஆனந்தராஜ் தனது வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.

    இது குறித்து அவரது மனைவி கற்பகவள்ளி சிவகாசி கிழக்கு போலீசில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×