search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குமரி மாவட்டத்தில் 12 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்: டி.ஐ.ஜி. அதிரடி உத்தரவு
    X

    குமரி மாவட்டத்தில் 12 இன்ஸ்பெக்டர்கள் அதிரடி மாற்றம்: டி.ஐ.ஜி. அதிரடி உத்தரவு

    குமரி மாவட்டத்தில் பணியாற்றி வந்த 12 இன்ஸ் பெக்டர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை நெல்லை சரக டி.ஐ.ஜி. தினகரன் பிறப்பித்துள்ளார்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பணியாற்றி வந்த 12 இன்ஸ் பெக்டர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை நெல்லை சரக டி.ஐ.ஜி. தினகரன் பிறப்பித்துள்ளார்.

    இரணியல் இன்ஸ்பெக்டர் ஹரிகரன் தூத்துக்குடி சிப்காட்டுக்கும், தக்கலை இன்ஸ்பெக்டர் கனகராஜ் நாகர்கோவில் நில அபகரிப்பு பிரிவுக்கும், கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் ராஜேஷ்  கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலையத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

    ராஜாக்கமங்கலம் இன்ஸ்பெக்டர் சுதாகர் குலசேகரபட்டினத்திற்கும், நாகர்கோவில் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ் பெக்டர் சாந்தாகுமாரி தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டைக்கும், குளச்சல் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜானகி குற்றாலத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

    குலசேகரம் இன்ஸ்பெக்டர் சங்கர்கண்ணன் நெல்லை ஊத்துமலைக்கும், குழித்துறை மகளிர் இன்ஸ் பெக்டர் உமா நெல்லை மாவட்டத்திற்கும், வடசேரி இன்ஸ்பெக்டர் சக்கரவர்த்தி மதுரைக்கும், நாகர்கோவில் நில அபகரிப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் நிர்மலாதேவி திண்டுக்கல்லுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

    களியக்காவிளை இன்ஸ்பெக்டர் மாடசாமி சென்னைக்கும், கன்னியாகுமரி போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் அருள் ஜாண் ஒயிஸ்லி நெல்லை ஆயுதப்படைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

    நெல்லை அச்சன்புதூர் இன்ஸ்பெக்டர் ஜமால் இரணியலுக்கும், கழுகு மலை இன்ஸ்பெக்டர் மாரிச்சாமி வடசேரி இன்ஸ்பெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
    தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ் பெக்டர் பிரேமா கொல்லங்கோட்டிற்கும், கோவில் பட்டி மதுவிலக்கு இன்ஸ் பெக்டர் தங்கராஜ் ராஜாக்க மங்கலத்திற்கும், கடம்பூர் இன்ஸ்பெக்டர் வனிதாராணி ஆரல்வாய்மொழிக்கும், நெல்லை ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் அந்தோணி கன்னியாகுமரி போக்குவரத்து பிரிவுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×