search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாநில கூடைப்பந்து போட்டி: அரைஇறுதியில் ஐ.ஒ.பி - ஐ.சி.எப். மோதல்
    X

    மாநில கூடைப்பந்து போட்டி: அரைஇறுதியில் ஐ.ஒ.பி - ஐ.சி.எப். மோதல்

    மாநில கூடைப்பந்து போட்டியில் இன்று மாலை நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் ஐ.ஒ.பி-ஐ.சி.எப். அணிகள் மோதுகின்றன
    சென்னை:

    மேயர் ராதாகிருஷ்ணன் கூடைப்பந்து கிளப் சார்பில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மாநகராட்சி திடலில் நடைபெற்று வருகிறது.

    இதன் ஆண்கள் பிரிவு கால்இறுதி ஆட்டம் நேற்று நடந்தது. ஒரு ஆட்டத்தில் ஐ.ஒ.பி. அணி 84-39 என்ற புள்ளிக்கணக்கில் ஆல் ஸ்டார் கிளப்பை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.

    மற்ற ஆட்டங்களில் ஐ.சி.எப். 77-66 என்ற புள்ளிக்கணக்கில் ஸ்டேட் பாங்கியையும், இந்தியன் வங்கி 78-50 என்ற கணக்கில் மகேந்திரன் கூடைப்பந்து கிளப்பையும், ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் 82-67 என்ற புள்ளி கணக்கில் சுங்க இலாகாவையும் தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.

    இன்று மாலை நடைபெறும் அரைஇறுதி ஆட்டங்களில் ஐ.ஒ.பி-ஐ.சி.எப்., இந்தியன் வங்கி- ஜேப்பியார் இன்ஸ்டிடியூட் அணிகள் மோதுகின்றன.
    Next Story
    ×