search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளை வக்கீல்கள் தினமாக கொண்டாட கோரிக்கை: பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு
    X

    வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளை வக்கீல்கள் தினமாக கொண்டாட கோரிக்கை: பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு

    வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளை வக்கீல்கள் தினமாக கொண்டாட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடவேண்டும் என ஐகோர்ட்டுக்கு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், மூத்த வக்கீல் செல்லையா என்பவர் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகவும், ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளை குழந்தைகள் தினமாகவும், தயான்சந்தின் பிறந்த நாளை விளையாட்டு தினமாகவும் கொண்டாடப்படுகின்றன.

    அதுபோல, சுதந்திரத்துக்காக போராடிய வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை வக்கீல்கள் தினமாக கொண்டாடவேண்டும். நாட்டின் விடுதலைக்காக போராடிய சிதம்பரனார், 1908ம் ஆண்டு சிறைக்கு செல்லும்போது, ஜவஹர்லால் நேருவுக்கு வெறும் 19 வயதுதான். மகாத்மா காந்தி அரசியலுக்கு வரவேயில்லை. ராஜாஜி பொது வாழ்க்கைக்குள் நுழையவே இல்லை. இந்த தலைவர்களுக்கு எல்லாம் முன்னோடியான தலைவராக சிதம்பரனார் திகழ்ந்தார்.

    ஆங்கிலேயர் அரசுக்கு எதிராக சுதேசி கப்பல் கம்பெனியை நடத்தினார். சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், சமூக சீர்த்திருத்தவாதி மற்றும் வக்கீலான வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் செப்டம்பர் 5ந் தேதி வருகிறது. இந்த நாளை வக்கீல்கள் தினமாக கொண்டாட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கி‌ஷன் கவுல், நீதிபதி மகாதேவன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    இந்த நாட்டிற்காக பல தனிப்பட்ட மனிதர்கள், தலைவர்கள் பல தியாகங்களை செய்துள்ளனர். அவ்வாறு தியாகம் செய்த தலைவர்களை கண்டிப்பாக அங்கீகரித்து கவுரவிக்க வேண்டும். ஆனால், எப்படி அங்கீகரித்து கவுரவிக்க வேண்டும்? என்ற முடிவினை அரசுதான் எடுக்கவேண்டும்.

    அரசு முடிவு எடுத்து அறிவிக்க வேண்டிய வி‌ஷயத்தில் இந்த ஐகோர்ட்டு தலையிட முடியாது. அதேநேரம், இதுவரை மனுதாரர் தன் கோரிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பவில்லை. அதனால், மனுதாரர்தன் கோரிக்கையை மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கவேண்டும். அவ்வாறு அனுப்பி வைக்கப்படும் கோரிக்கையை மத்திய, மாநில அரசு பரிசீலிக்கவேண்டும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
    Next Story
    ×