search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகம் முழுவதும் 34 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றம்
    X

    தமிழகம் முழுவதும் 34 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றம்

    தமிழகம் முழுவதும் 34 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் நேற்று முன்தினம் இரவு மாற்றப்பட்டனர். இதற்கான உத்தரவை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார்.
    சென்னை:

    தமிழகம் முழுவதும் 34 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் நேற்று முன்தினம் இரவு மாற்றப்பட்டனர். இதற்கான உத்தரவை டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் பிறப்பித்துள்ளார்.

    சென்னை (தெற்கு) போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி கமிஷனராக ஆர்.ராஜசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம், திருவள்ளூர் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்திற்கு மாற்றப்பட்டார்.

    ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்பிரண்டாக சிலம்பரசன் பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் துணை போலீஸ் சூப்பிரண்டாக தற்போது பணியாற்றிவந்த ஜெயக்குமார் சென்னை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
    Next Story
    ×