என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாரியப்பனுக்கு குரூப்-1 பணி வழங்க நடவடிக்கை: அமைச்சர் பேட்டி
Byமாலை மலர்23 Sep 2016 4:28 PM GMT (Updated: 23 Sep 2016 4:29 PM GMT)
பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு குரூப்-1 பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
சென்னை:
ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன், உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். நாடு திரும்பிய மாரியப்பன், நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார்.
சென்னை விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன், பெஞ்சமின் மற்றும் விளையாட்டுத்துறையினர் வரவேற்றனர்.
அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த மாரியப்பன், சாதனைகள் படைப்பதறகு உடல் குறைபாடு தடையில்லை என்றும், நாட்டுக்காக தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார். மேலும், அடுத்த பாராலிம்பிக்கில் தங்கம் வெல்வதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.
அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறுகையில், மாரியப்பன் கோரிக்கை வைக்கும் பட்சத்தில் அவருக்கு குரூப்-1 நிலையில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அரசு உதவும் என்றும் தெரிவித்தார்.
மாரியப்பன் நாளை மாலை தமிழக ஆளுநரை சந்தித்து வாழ்த்து பெற உள்ளதாக அவரது பயிற்சியாளர் தெரிவித்தார்.
ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன், உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். நாடு திரும்பிய மாரியப்பன், நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார்.
சென்னை விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன், பெஞ்சமின் மற்றும் விளையாட்டுத்துறையினர் வரவேற்றனர்.
அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த மாரியப்பன், சாதனைகள் படைப்பதறகு உடல் குறைபாடு தடையில்லை என்றும், நாட்டுக்காக தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார். மேலும், அடுத்த பாராலிம்பிக்கில் தங்கம் வெல்வதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.
அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறுகையில், மாரியப்பன் கோரிக்கை வைக்கும் பட்சத்தில் அவருக்கு குரூப்-1 நிலையில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அரசு உதவும் என்றும் தெரிவித்தார்.
மாரியப்பன் நாளை மாலை தமிழக ஆளுநரை சந்தித்து வாழ்த்து பெற உள்ளதாக அவரது பயிற்சியாளர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X