search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாரியப்பனுக்கு குரூப்-1 பணி வழங்க நடவடிக்கை: அமைச்சர் பேட்டி
    X

    மாரியப்பனுக்கு குரூப்-1 பணி வழங்க நடவடிக்கை: அமைச்சர் பேட்டி

    பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு குரூப்-1 பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.
    சென்னை:

    ரியோ டி ஜெனீரோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன், உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். நாடு திரும்பிய மாரியப்பன், நேற்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார்.

    சென்னை விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன், பெஞ்சமின் மற்றும் விளையாட்டுத்துறையினர் வரவேற்றனர்.

    அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த மாரியப்பன், சாதனைகள் படைப்பதறகு உடல் குறைபாடு தடையில்லை என்றும், நாட்டுக்காக தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார். மேலும், அடுத்த பாராலிம்பிக்கில் தங்கம் வெல்வதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

    அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறுகையில், மாரியப்பன் கோரிக்கை வைக்கும் பட்சத்தில் அவருக்கு குரூப்-1 நிலையில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அரசு உதவும் என்றும் தெரிவித்தார்.

    மாரியப்பன் நாளை மாலை தமிழக ஆளுநரை சந்தித்து வாழ்த்து பெற உள்ளதாக அவரது பயிற்சியாளர் தெரிவித்தார்.
    Next Story
    ×