என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயலலிதா விரைவில் முழுமையாக குணமடைய வேண்டும்: மு.க.ஸ்டாலின், வைகோ, வாசன், திருமாவளவன் வாழ்த்து
Byமாலை மலர்23 Sep 2016 2:20 PM GMT (Updated: 23 Sep 2016 2:20 PM GMT)
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். காய்ச்சல் குணமடைந்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அவர் விரைவில் குணமடைய வேண்டி அ.தி.மு.க.வினர் பிரார்த்தனை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், தி.மு.க. தலைவர் கருணாநிதி, பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் ஜெயலலிதா நலம்பெற தங்களது வாழ்த்துக்களையும் பிரார்த்தனையையும் தெரிவித்துள்ளனர்.
அவ்வகையில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக்கில் வெளியிட்டு உள்ள தகவலில், “உடல் நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும், தமிழக முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் விரைவில் முழுமையாக குணம் அடைந்து, நிர்வாகப் பணிகளை தொடர வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் விரும்புகிறேன” என கூறி உள்ளார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்ற செய்தி அறிந்து மிகுந்த கவலை ஏற்பட்டது. முதலமைச்சர் முழுமையான உடல்நலம் பெற இயற்கை அன்னையின் அருளை வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். காய்ச்சல் குணமடைந்து அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அவர் விரைவில் குணமடைய வேண்டி அ.தி.மு.க.வினர் பிரார்த்தனை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி, தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், தி.மு.க. தலைவர் கருணாநிதி, பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் ஜெயலலிதா நலம்பெற தங்களது வாழ்த்துக்களையும் பிரார்த்தனையையும் தெரிவித்துள்ளனர்.
அவ்வகையில், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக்கில் வெளியிட்டு உள்ள தகவலில், “உடல் நலக் குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும், தமிழக முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் விரைவில் முழுமையாக குணம் அடைந்து, நிர்வாகப் பணிகளை தொடர வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் விரும்புகிறேன” என கூறி உள்ளார்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்ற செய்தி அறிந்து மிகுந்த கவலை ஏற்பட்டது. முதலமைச்சர் முழுமையான உடல்நலம் பெற இயற்கை அன்னையின் அருளை வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைய விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X