என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு முகாம் நாளை நடக்கிறது
Byமாலை மலர்23 Sep 2016 10:46 AM GMT (Updated: 23 Sep 2016 10:46 AM GMT)
ராமநாதபுரத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குறைந்த பட்ச படிப்பறிவினை பெற்றவர்கள், பத்தாம் வகுப்பு, மேல்நிலைவகுப்பு, பட்டயப்படிப்பு மற்றும் இதர தொழிற்கல்வித் தகுதியினைப் பயின்றவர்கள் பயன்பெறும் வகையில் இச்சிறப்பு முகாமில் 50-க்கும் மேற்பட்ட மாநிலத்தில் உள்ள பிரபலமான உற்பத்தி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள காலியிடங்களை அறிவித்துள்ளது.
இம்மனிதவள தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் அந்நிறுவனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தின் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வருகை புரிந்து தேவைப்படும் தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளது. இதன் பொருட்டு ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்களின் தேவைக்கேற்ப, அருகாமையிலேயே வேலையளிக்கும் நிறுவனங்கள் வருகைபுரிய உள்ளதால் இவ்வாய்ப்பினை அனைத்து இளைஞர்களும் தவறாது பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கான படிவத்தினை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அல்லது வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளான 24-ந்தேதி (நாளை)முகாமிலும் பெற்று கொள்ளலாம். இச்சிறப்பு முகாம் காலை 8.30 மணி முதல் 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.
இம்முகாமினில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக கலெக்டர் தெரிவித்து உள்ளார்.
இது குறித்து மாவட்ட கலெக்டர் நடராஜன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள குறைந்த பட்ச படிப்பறிவினை பெற்றவர்கள், பத்தாம் வகுப்பு, மேல்நிலைவகுப்பு, பட்டயப்படிப்பு மற்றும் இதர தொழிற்கல்வித் தகுதியினைப் பயின்றவர்கள் பயன்பெறும் வகையில் இச்சிறப்பு முகாமில் 50-க்கும் மேற்பட்ட மாநிலத்தில் உள்ள பிரபலமான உற்பத்தி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் இதர தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள காலியிடங்களை அறிவித்துள்ளது.
இம்மனிதவள தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் அந்நிறுவனங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தின் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் வருகை புரிந்து தேவைப்படும் தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளது. இதன் பொருட்டு ராமநாதபுரம் மாவட்ட இளைஞர்களின் தேவைக்கேற்ப, அருகாமையிலேயே வேலையளிக்கும் நிறுவனங்கள் வருகைபுரிய உள்ளதால் இவ்வாய்ப்பினை அனைத்து இளைஞர்களும் தவறாது பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கான படிவத்தினை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அல்லது வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளான 24-ந்தேதி (நாளை)முகாமிலும் பெற்று கொள்ளலாம். இச்சிறப்பு முகாம் காலை 8.30 மணி முதல் 5.00 மணி வரை நடைபெறவுள்ளது.
இம்முகாமினில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X